districts

img

பள்ளி மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை

கோவை, ஜூலை 29- கோவையில் பள்ளி மாணவிக ளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பெற்றோர் பள் ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.  கோவை - பாலக்காடு சாலை சுகுனா புரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந் நிலையில், பள்ளியின் உடற்கல்வி ஆசி ரியராக பணியாற்றி வரும் பிரபாகரன் என்பவர் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப் படுகிறது. இது தொடர்பாக சில மாணவி கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறி யதைத் தொடர்ந்து, வியாழனன்று பெற் றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரி யரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக் காத நிலையில், வெள்ளியன்று காலை 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற் றும் அப்பகுதி பொதுமக்கள் பள்ளியை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.

அப்போது ஆசிரியரின் விபரம் குறித்து பள்ளி நிர்வாகம் எவ்வித பதி லும் கூறாமல் இருந்ததால் போராட் டம் தீவிரமடைந்தது. இதையடுத்து மாந ரக காவல் துணை ஆணையர் தலைமை யில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்ப குதியில் குவிக்கப்பட்டனர். மேலும், வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ  மற்றும் காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்டோர் விரைந்து சென்று பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என  அனைத்து தரப்பினரிடமும் விசாரணை  மேற்கொண்டனர். இந்த விசாரணை யில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக  கூறப்படும் ஆசிரியர் பிரபாகரன், வால்பாறை அரசு பள்ளியிலிருந்து  கடந்த வாரம் மாறுதலாகி சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்ததாக வும், வந்த சில தினங்களிலேயே பல மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் பாலி யல் தொடர்பாக மாணவிகளிடம் பேசிய தும் தெரியவந்தது.

இதன்பின் பெற்றோர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் பிரபாகரன் பணியினை நீக் கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடி யாக அவர் கைது கைது செய்யப்படு வார் எனவும் தெரிவித்தனர்.  இதனையடுத்து கோவை சரவணம் ்பட்டி பகுதியில் இருந்த ஆசிரியர் பிரபா கரன் கைது செய்யப்பட்டார் என காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால், சமாதானமடைந்த பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், அப்பகுதியில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம்  நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியான தையடுத்து காவல்துறையினர் அதிகள வில் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு  பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளிக்கு வெள்ளியன்று விடு முறையும் விடப்பட்டது.