districts

காவலரின் மனைவி தற்கொலை வரதட்சனை கொடுமை என பெற்றோர் புகார்

உதகை, ஜூன் 9- காவலரின் மனைவி தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் அளித்த  புகாரின் பேரில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத் தைச் சேர்ந்த வினீத் பாலாஜி (29). உதகை நகர மேற்கு காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், திண்டுக் கல் மாவட்டம், கிலாப்பாடி என்ஜிஜிஓ கால னியைச் சேர்ந்த முத்துப்பாண்டீஸ்வரிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் தம்பதியினர் உதகையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். இதற்கிடையே தம்பதியி னருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற் பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலை யில், முத்துப்பாண்டீஸ்வரி காவலர் குடியி ருப்பில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலை யில் இருந்தார். இதுகுறித்த தகவலின்பே ரில் உதகை நகர மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், முத்துப்பாண்டீஸ்வரி யின் பெற்றோர், தங்களது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், எங்க ளது மகளின் திருமணத்தின்போது வரதட் சணையாக 18 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஆனாலும், கூடுதலாக பணம் மற்றும் இருசக்கர வாக னம் வரதட்சணையாக தர வேண்டும்  என்று கூறி எங்கள் மகளை கொடுமைப்படுத் தியுள்ளனர். எனவே, எங்கள் மகள் இறப் பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள் ளனர். இதுகுறித்து உதகை நகர மேற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,  ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட் டுள்ளது.