உதகை, ஆக.1- கோத்தகிரி அருகே அரசுப்பள்ளியில் சுகா தாரமற்ற சத்துணவு வழங்குவதாக கூறி பெற் றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, தங்க ளது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி - உதகை சாலையில் பாக்கிய நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாண வர்களுக்கு வழங்கப்படும் மதிய நேர சத்து ணவு சுகாதாரமற்றதாகவும், உணவில் பூச்சி கள் இருப்பதாகவும், சுத்தமான தண்ணீரில் உணவு தயாரிக்கப்படுவது இல்லை என்று தங்களது பெற்றோர்களிடம் மாணவர்கள் கூறியுள்ளனர். மேலும், சுகாதாரமற்ற உணவை உண்பதால் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு மாணவர்கள் ஆளாகி வந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்க வேண் டும் என பள்ளியில் உள்ள புகார் பெட்டியில் மாணவர்கள் கையெழுத்திட்டு மனு அளித் தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால், ஆவேசமடைந்த பெற்றோர் கள் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், சத்துணவு சமைக்கும் இடத்திற்கு பெற்றோர் கள் நேரில் சென்று தண்ணீர், சமையல் எண் ணெய், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட் களின் தரத்தை பார்வையிட்டனர். உணவு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக கூறி பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதன்பின் உரிய நடவடிக்கை எடுக் கும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை எனக்கூறி வீட்டிற்கு மாண வர்களை அழைத்து சென்றனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், பாக்கிய நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தரமான கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மதிய சத்துணவு சுகா தாரமற்ற தண்ணீர், தரமற்ற பருப்பு, பூச்சிகள் உள்ள காய்கறிகள் மற்றும் காலாவதி தேதி முடிந்த சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு சமைக்கப்படுவதை நேரில் பார்த் தோம். மேலும், சத்துணவு முட்டை நன்றாக வேக வைக்கபடுவதில்லை. இதனால் அதை உண்ணும் குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சனைக்கு அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்கும் வரை எங்கள் குழந்தை களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரி வித்தனர்.