நாமக்கல், ஆக.16- மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் தனியார் காகித ஆலையை கண் டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடு பட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுப்ப தாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி பகுதியில் ஏராள மான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலை யில், ஓடப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் (சேசசாயி) காகித ஆலை யிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச் சூழலும், பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த புகையில் கரிதுகள்கள், தூசிகள், சாம்பல் துகள்கள், சுண்ணாம்பு துகள்கள் காற்றில் கலந்து பறப்பதால் சாலை களில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் என அனைவரும் பாதிக்கபடுகின்றனர். மேலும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதி களில் இந்த சாம்பல் துகள்கள் பரவுவதால் தண்ணீர், உணவு கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு மக்கள் பாதிக்கப்படுவதாக தொடர் புகார் எழுந்தது. மேலும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை, ஓடப்பள்ளி பகுதியில் செயல் படும் தனியார் சர்க்கரை ஆலை மற்றும் காகித ஆலைகள் கழிவுகளை வெளியேற்றுவதால் அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு துர் நாற்றம், ஒவ்வாமை, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளும், கண் நோய், கேன்சர், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்பட்டு வரு கிறது. கழிவுநீர் வெளியேற்றத்தால் விவசாயம் செய்ய முடியாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் காகித ஆலையிலி ருந்து வெளியேறும் சாம்பல் துகள்கள், சுண் ணாம்பு துகள்களை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று ஓடப்பள்ளி பேருந்து நிறுத்த பகுதியிலிருந்து காவேரி ஆர்.எஸ் சாலை வரை நடைபயண பிரச்சாரம் மேற்கொள்ள முயன்றனர்.
இதுகுறித்து தக வலறிந்த பள்ளிபாளையம் காவல் ஆய்வா ளர் சுகுமார், நடைபயணப் பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தார். இதனால் ஆவேசமடைந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் ஓடப் பள்ளி, ஓடப்பள்ளி பிரிவு சாலை, காவேரி ஆர்எஸ் ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கட்சி செயலா ளர் ரவி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே. குமார், எஸ்.முத்துக்குமார் உள்ளிட்ட ஏராள மானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காகித ஆலை நிர்வாகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர், அரசுத்துறை அதிகாரிகள் அடங்கிய முத் தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. வட் டாட்சியர் சண்முகவேல் தலைமையில் நடை பெற்ற இப்பேச்சுவார்த்தையில் மாசு கட்டுப் பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணி வண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர் கே. மோகன், ஓடப்பள்ளி கட்சி கிளை செயலாளர் அறிவழகன் ஆகியோர் மற்றும் தனியார் காகித ஆலை, சர்க்கரை ஆலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புகார் குறித்து ஆய்வு செய்து ஆலை மீது நடவடிக் கைகள் எடுப்பதாக மாசுபாட்டு வாரிய அதி காரிகள் உறுதியளித்ததன் பேரில் அனை வரும் கலைந்து சென்றனர்.