உடுமலை, நவ. 4 – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பகிர்மானக்குழு, திட்டக்குழு தேர்தல்களை நடத்தி முடிக்க திருப்பூர், கோவை மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிஏபி திட்ட விவசாயிகள் கோரியுள்ள னர். பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட் டம், பாலாறு படுகை பாசன சங்க தலைவர் கள், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளியன்று உடு மலை அருகே குடிமங்கலம் ரத்தினவேல் திரு மண மண்டபத்தில், உடுமலை கால்வாய் முன் னாள் பகிர்மானக்குழுத் தலைவர் அருண் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் பகிர்மானக்குழு தலைவர் பூலாங்கிணறு ஜெயபால் முன்னிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி உடுக் கம்பாளையம் எஸ்.பரமசிவம் கூட்டத்தை ஒருகிணைத்தார். திருமூர்த்தி நீர்த்தேக்க முன்னாள் திட்டக் குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூட் டத்தின் நோக்கம் குறித்துப் பேசினார். முன் னாள் பகிர்மானக்குழு தலைவர்கள் பொங்க லூர் கோபால், குண்டம் ஈஸ்வரன், வடசித்தூர் நல்லதம்பி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்ட நிர்வாகிகள் பால தண்டபாணி, ஸ்ரீதர், பாசன சங்கத் தலை வர்கள் கொடிங்கியம் சின்னசாமி, வை.பழ னிசாமி, வல்லக்குண்டாபுரம் செந்தில் உள் ளிட்டோர் கருத்துரை வழங்கினர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங் கப்பட்ட உத்திரவின்படி பகிர்மானக்குழு மற் றும் திட்டக்குழு தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும். கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சி யர்கள் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம்
கடந்த அக். 13 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பாசன சபை தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவிற்கு மாறாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஒரு பகுதி விவசாயிகளுக்காக தனி கூட்டம் நடத்தியது, ஏற்கனவே தேர்தெடுக்கப் பட்ட தலைவர்களை அவமதிக்கும் நடவ டிக்கை ஆகும். எனவே மாவட்ட ஆட்சிய ருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாலாறு படுகை என்பது 134 பாசன சங்கங்களை உள்ளடக்கியது. சென்ற காலங் களில் வெள்ளக்கோவில் கிளைக்கால்வா யில் தேர்ந்தெடுக்கபட்ட தலைவர்களில் வேண்டுகோளுக்கிணங்க நடைமுறைப்ப டுத்தப்பட்ட பாசன நடைமுறைகளை கருத் தில் கொள்ளாமல், புதியதாக வந்த சில தலை வர்களின் நிர்பந்தத்திற்கு உட்பட்டு ஒவ் வொரு முறையும் நடைமுறைகளை மாற்றி அமைத்தது தவறு. பழைய நடைமுறைபடி தண்ணீர் வழங்க வேண்டும். கடுமையான வறட்சி காலங்களில் வெள் ளகோவில் கிளை கால்வாய்களுக்கு சீராக தண்ணீர் சென்று சேரவில்லை என்பதற்காக ஆங்காங்கே பல்வேறு கிளைக் கால்வாய் களை அடைத்து, தண்ணீர் கொண்டு செல்லப் பட்டது. தற்போதும் அதே நடைமுறைதான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு உள் ளது. அதனால் அந்தந்த கிளைக் கால்வாய் களில் பாசனம் பெறும் விவசாயிகள் கடு மையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே எக்காரணம் கொண்டும் தண்ணீர் திறக்கப்பட்ட கால்வாய்களை இடையி டையே அடைக்கக் கூடாது என்று நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும். வெள்ளகோவில் கிளைக் கால்வாய்க்கு தொடர்ந்து 15 நாட்கள் தண்ணீர் வழங்குவது போலவே அனைத்துக் கால்வாய்களுக்கும் அடைப்பு ஏதும் இல்லாமல் 7, 14, 13 நாட்க ளுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண் டும்.
விகிதாசார நீர் விரயம்
பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் நீர் விரயம் கடுமையாக உயர்ந்துள்ளது. தற் போது 129 கிமீ., தூரமுள்ள பரம்பிக்குளம் பிர தானக் கால்வாயில் ஏற்படும் விரயம், கிளைக் கால்வாய்கள் வரை ஏற்படும் நீர் விரயம் ஆகி யவற்றை துல்லியமாக கணக்கிட்டு விகி தாச்சார அடிப்படையில் பங்கிட்டுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாறு படுகையில் தேர்ந்தெ டுக்கப்பட்ட தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்போது, பல்வேறு தனிந பர்கள் லெட்டர்பேடு அடித்துக் கொண்டு, அறிக்கைககள் விடுவதையும், போராட்டங் கள் நடத்துவதையும் நீர்வளத்துறை அதிகரி களும், மாவட்ட நிர்வாகமும் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை சட்டத்தின்படி தேர்ந்தெ டுக்கப்பட்ட மிகப்பெரும்பான்மையான தலைவர்களை புறக்கணித்து விட்டு, கடைக் கோடியில் இருக்கும் சில தலைவர்களை மட் டும் வைத்துக் கொண்டு, தாராபுரம் கோட் டாட்சியர் கூட்டம் நடத்துவதை நிறுத்த வேண் டும். பொள்ளாச்சி கூட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தாராபுரம் கோட்டாட் சியர், நீர்வளத்துறை அதிகாரிகள் மேற் கொண்டால், அவை எங்களைக் கட்டுப்படுத் தாது. அதனால் ஏற்படும் பின் விளைவுக ளுக்கு அந்த அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழக அரசு மீண்டும் குடிமராமத்து நிதி ஒதுக்கித்தர வேண்டும். நீண்ட காலமாக கிடப் பில் கிடக்கும் ஆனைமலையாறு மற்றும் நல் லாறு திட்டங்களை நிறைவேற்ற கேரள அரசு டன் போர்க்கால அடிப்படையில் பேச்சு வார்த்தை துவங்க வேண்டும் என்றும் விவசா யிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.