districts

img

வெள்ளகோவில் விவசாயிகளுக்கு தனி கூட்டம்: திருப்பூரில் பிஏபி விவசாயிகள் கொந்தளிப்பு

திருப்பூர், அக். 29 - பிஏபி திட்டத்தில் வெள்ளகோவில் கிளை  வாய்க்கால் விவசாயிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் தனி கூட்டம் ஏற்பாடு செய்த தால், பிஏபி திட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்புத்  தெரிவித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சனிக்கிழமை மாதாந்திர விவசாயிகள்  குறைதீர்க் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் திரண்டு வந்திருந்தனர். அதே சமயம் பிஏபி வெள்ளகோவில் கிளை வாய்க்கால் கடை மடை ஆயக்கட்டுதா ரர்கள் சங்கத்தினர் ஏற்கனவே தங்களுக்கு உரிய தண்ணீர் தருவதில்லை என்றும், மாவட்ட விவசாயிகள் குறை தீர்க் கூட்டத் தின்போது தங்கள் குடும்ப அட்டை மற்றும்  வாக்காளர் அடையாள அட்டை ஆகிய வற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து  விட்டு தற்கொலைக்கு அனுமதி கோரும் போராட்டம் நடத்தப் போவதாக அறி வித்திருந்தனர். விவசாயிகள் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் மற்றும் வளாகத்தில் போலீ சார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரக தரைத் தளம் அறை எண் 20இல் வழக்கமான விவசா யிகள் மாதாந்திர கூட்டம் நடத்த ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. ஆனால் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் விவசாயிகளுக்கு தனி யாக மேல் தளத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது.

இதை அறிந்து பிஏபி திட்ட விவசாயிகள் ஆவேசம் அடைந்தனர்.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வரவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் அதிகாரிகள் கூட்டத்தை நடத்த வந்திருந்தனர். அப்போது பிஏபி  திட்டத்தின் பிரதான பகிர்மான வட்டங்கள்  மற்றும் பாசன சபைகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட வருவாய் அலு வலரை முற்றுகையிட்டு, வெள்ளகோவில் விவசாயிகளுக்கு தனிக் கூட்டம் ஏற்பாடு செய் தது சரியல்ல என்று கூறினர். பிஏபி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மெடிக்கல் பரமசிவம், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், துணைத் தலைவர் உடுக்கம்பாளையம் எஸ்.பரமசிவம், துணைச் செயலாளர் பாலதண்டபாணி உள் பட விவசாயிகள் கூறுகையில், பிஏபி தண் ணீர் பங்கீடு தொடர்பான கொள்கை பிரச்ச னைகளைப் பேசுவதென்றால் அதற்கு தேர்ந் தெடுக்கப்பட்ட சபைகளின் நிர்வாகிகள் அனைவரையும் கொண்ட கூட்டத்தை நடத்த  வேண்டும். யாரோ சிலர் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, கூட்டம் சேர்த்து வருகிறார் கள் என்பதற்காக தனியாக கூட்டம் நடத்து வதை ஏற்க முடியாது. எங்களுக்கு அப்படி  செய்யத் தெரியாதா? பிஏபி திட்டத்தில் மொத்தம் 9 பகிர்மான வட்டங்கள், 132 தலைவர்கள் உள்ளனர். இதில் காங்கேயம் ஒரு பகிர்மான வட்டம் நீங் கலாக 8 பகிர்மான வட்டங்கள் மற்றும் சில  பாசன சபைத் தலைவர்கள் தவிர 90 சதவி கிதத்திற்கு மேற்பட்டவர்கள் இங்கிருக்கி றார்கள். பிஏபி திட்டத்தில் பற்றாக்குறையான  தண்ணீர் கிடைப்பதை கொண்டுதான் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் தரப்படு கிறது.

உடுமலை உள்பட பிரதான பகுதிகளில் விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பு, நெருக்கடிகளைக் கடந்துதான் அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் விநி யோகம் செய்யப்படுகிறது.  எனவே அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் அழைத்து ஒரு கூட்டம்  நடத்த வேண்டும். தனியாக ஒரு பகுதியின ருக்கு மட்டும் கூட்டம் நடத்துவதாக இருந் தால் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதை விவசாயிகள் குறை தீர்க் கூட்டம் நடத்தும் இதே நாளில், ஒரு பகுதி  அதிகாரிகளை அங்கு அனுப்பி, இங்கும்  முழுமையாக அதிகாரிகள் இல்லாமல் இரண்டு கூட்டமாக நடத்துவது ஏற்க முடி யாது. வேறொரு நாளில் வேண்டுமானால் அவர்களுக்கு தனியாக கூட்டம் நடத்தலாம்.  எங்களுக்கு ஒரு தேதியில் கூட்டம் நடத் துங்கள் என்று கேட்டனர். இதையடுத்து மாவட்ட வருவாய் அலு வலர், மாவட்ட ஆட்சியரிடம் கலந்து பேசி தனி யாக தேதி குறிப்பிட்டு பிஏபி பாசன சபை விவ சாயிகள் கூட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.  இதையடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந் தது. விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது.