உடுமலை, செப்.5- உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி விவசாய பயன்பாட்டிற்கு ஒரு சுற்று தண்ணீர் வரும் 20ஆம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பிஏபி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் திரு மூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கலந் தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில் பருவமழை போதிய அளவு இல் லாமல் போனதால் பரம்பிக்குளம் – ஆழி யாறு திட்டத்தின் தொகுப்பு அணைக ளில் நீர் இருப்பு மிகவும் குறைந்து உள் ளது. இதனால் இம்மாதம் 20 ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து நான் காம் மண்டல பாசனத்திற்கு நிலுவை யில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும், குடிநீர் தேவைகளை கருத் தில் கொண்டும் உயிர் தண்ணீராக ஒரு சுற்று வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் தண்ணீர் திறக்கப்படும் காலத் தில் மழை பெய்து அணைக்கு கூடுதல் நீர் கிடைத்தால் விவசாய பயன்பாட் டிற்கு கூடுதல் தண்ணீர் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பர மசிவம் தலைமையில் நடைபெற்ற இத் திட்டக்குழு கூட்டத்தில், சிறப்பு தலைமை பொறியாளர் இரா.பாண்டி மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் அருண், நித்தியானந்தம், நல்லதம்பி, குருசாமி, ஈஸ்வரன், தெய்வசிகாமணி, ஈஸ்வரமூர்த்தி, பாலசுப்பிரமணியன் மற் றும் செயற்பொறியாளர்கள் பரம்பிக்கு ளம் கோட்டம், பரம்பிக்குளம், ஆழி யாறு வடிநிலைக் கோட்டம், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் திருமூர்த்திக் கோட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.