districts

img

இடியும் தருவாயில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டடம்

கோபி, ஜன.4- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெருந்தலையூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் விரிசல் அடைந்து இடி யும் நிலையில் உள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருந்தலையூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்டது. இந்தநிலையில், ஊராட்சி மன்ற அலுவலக கட்டி டம் தற்போது சிதலமடைந்து காணப்படுகிறது. மழைகா லங்களில், மழைநீரானது  சொட்டு நீர் போன்று வடிந்து வரு கிறது. இதனால், அலுவலகத்தில் உள்ள முக்கியமான ஆவ ணங்கள் தண்ணீரில் நனைகின்றன. அதுமட்டுமின்றி, கட்டிடத் தின் இந்த மோசமான நிலைமையால், அலுவலக ஊழியர்க ளும், பொதுமக்களும், நாள்தோறும் அச்சத்துடனே வந்து  செல்கின்றனர். எனவே சிதலமடைந்து இடியும் தருவாயில் உள்ள பெருந்தலையூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத் திற்கு மாற்றாக, புதிய கட்டிடம் அமைத்து கொடுக்க வேண்டி  சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.