districts

காங்கேயம் அருகே வீடு இடிக்கப்பட்ட விவகாரம்: பாதிக்கப்பட்டவருக்கு ஊராட்சி தலைவரின் கணவர் மிரட்டல்

திருப்பூர், ஆக.29 - காங்கேயம் அருகே வீடு இடிக் கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப் பட்ட சிவாவை ஆலம்பாடி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் அழைத்து மிரட்டி இருக்கிறார். காங்கேயம் அருகே ஆலம்பாடி  ஊராட்சி நெய்க்காரன்பாளையத் தில் உள்ள புறம்போக்கு இடத்தில்  சிவா என்பவர் தனது குடும்பத்து டன் 14 ஆண்டுகளாக வசித்து வரு கிறார். அருகாமையில் வசித்து வரும் சுப்பிரமணி என்பவர் தனது  வீட்டை விரிவுபடுத்திக் கட்ட வேண் டும் என்று சிவாவை அங்கிருந்து  காலி செய்யும்படி கூறியிருக் கிறார். இந்த பிரச்சனையில் உள்ளூர் சாதி ஆதிக்க சக்திகள் சுப்பிரமணிக்கு ஆதரவாக சேர்ந்து கொண்டு சிவாவை அங்கிருந்து காலி செய்யும்படி வற்புறுத்தினர். ஆனால் அவர்களது மிரட்டலுக்கு பணிய சிவா மறுத்துவிட்டார். இந்த நிலையில் ஊர்க்கூட்டம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்த சாதி  ஆதிக்க கும்பல் கடந்த 20 நாட் களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிவாவின் வீட்டை இடித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சாமிநாதன் சம்பவ இடத்திற்கு மறு நாள் நேரில் சென்று  பார்வையிட்டதுடன், வீடு இடிப்பு  சம்பவத்தில் ஈடுபட்ட காங்கேயம் முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக ஒன்றியச் செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ், காங்கேயம் நகர்மன்றத் தலைவர் சூர்யபிர காஷ் மற்றும் 10 பேர் கும்பல் மீது  வழக்குப் பதிவு செய்யவும் உத்தர விட்டார்.

அதன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் நட ராஜ், சூர்யபிரகாஷ் ஆகியோர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் சிவா குடும் பத்தினர் பகல் நேரத்தில் இடிக் கப்பட்ட அதே வீட்டில் வசிக்கின் றனர். இரவு நேரத்தில் காங்கேயத் தில் தங்கள் மகன் வீட்டிற்குச் சென்று தங்கிக் கொள்கின்றனர். அந்த வீட்டிற்கு காவல் துறை பாது காப்புப் போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் அவர் வசிக்கும் வீட்டிற்கு பட்டாவும் வழங் கியுள்ளது. இதற்கிடையே கடந்த இரு  தினங்களுக்கு முன்பு ஆலம்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் ராஜா மணியின் கணவர் ரங்கசாமி அலை பேசியில் சிவாவை அழைத்து மிரட்டல் விடுத்திருக்கிறார். அவரது  வீட்டுக்கு கொடுத்திருக்கும் குடிநீர் இணைப்பை துண்டிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் முடிவு செய் திருப்பதாகவும், அரசு கொடுத்த பட்டாவை ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றி ரத்து செய்யவும் முடிவு செய்திருப்பதாகவும், என்  பேச்சை பதிவு செய்து வழக்குப் போடு, நான் சிறைக்குப் போகவும்  தயார் என்று ரங்கசாமி  கூறியிருக் கிறார். இந்த ஆடியோ சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. இதையடுத்து காவல் துறை யினர் ரங்கசாமியை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி கூறிய சிவா, ரங்க சாமி அழைத்து மிரட்டல் விடுத்தது  உண்மைதான் என்றார். அதே சமயம் தனது வீட்டிற்கு காவல்  துறை பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. ஊரில் உள்ள ஒரு பகுதி  மக்கள் தனக்கு ஆதரவாக உள்ள னர். வேறு பிரச்சனை எதுவும் இல்லை, என்று கூறினார்.