லஞ்சம்: ஊராட்சி தலைவரின் கணவர் கைது
சேலம், செப்.6- செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் நிலம் வாங்கி அதை பிரித்து விற்பனை செய்து வருகி றார். இதுபோல கார்த்திகேயன் சேலம் மாவட்டம், மகுடஞ் சாவடி பகுதியில் நிலம் வாங்கியுள்ளார். இந்நிலத்திற்கு வீட்டு மனை பிரிவு அங்கீகாரம் வழங்க வேண்டும் என எர்ணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இந்த அங்கீகாரம் வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்க வேண்டும் என்றும், முன்தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் எர்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மேகலாவின் கணவர் மணிகண்டன் என்பவரும், மணிகண்டனின் உதவியா ளர் ஆனந்த் என்பவரும் கேட்டதாக தெரிகிறது. இந்த லஞ்ச பணத்தை தர விரும்பாத கார்த்திகேயன் இதுகுறித்து சேலம், குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு அலு வலகத்தில் புகாரளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், கார்த்திகேயனிடம் ரசாயனம் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். இதையடுத்து எர்ணா புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த மணிகண்டன் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்திடம் கார்த்திகேயன் அந்த பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்தி ருந்த சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து, லஞ்ச பணத்தை பறிமுதல் செய்த னர். இதுதொடர்பாக ஊராட்சி தலைவரின் கணவர் மணிகண் டனிடமும், அவரது உதவியாளர் ஆனந்திடமும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
மதுபானக்கடைக்கு எதிர்ப்பு
தருமபுரி, செப்.6- பையர்நத்தம் கிராமத்தில் அரசு மதுபானக்கடையை மூடக்கோரி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பையர்நத்தம் கிராமத்தில், ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள அரசு மதுபானக்கடையால், மது குடிக்க வருபவர்கள் பள்ளி கல்லூரி மாணவிகள், பெண்களை கேலி, கிண்டல் செய்கின் றனர். மேலும், இங்கு அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், உழைத்த பணத்தை மது வாங்குவதற்கே செலவு செய்து விடுகின் றனர். ஆகவே இங்குள்ள மதுபான கடையை அப்புறப் படுத்த வேண்டும், என்றனர்.
பணித்தள பொறுப்பாளர் மீது விவசாய தொழிலாளர் சங்கம் புகார்
ஆனைமலை, செப். 6- கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலை கேட்டு போராடியவர்களை மிரட்டும் தொனியில் பேசிய பணித்தள பொறுப்பாளர் மீது விவசாய தொழிலாளர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், கடந்த மாதம் நூறு நாள் வேலை திட்டத்தில் அட்டை வைத் துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், இத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக, ஆனை மலையிலும் ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலா ளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டமும், இதனைத்தொடர்ந்து மனு அளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில், ஆனைமலை ஒன்றியம் ஆத்துப்பொள்ளாச்சி ஊராட்சிக்குட்பட்ட 31 பேரு டைய மனுக்களும் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக வேலை வழங்காத ஆத்துப்பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றியத்தின் பணித்தள பொறுப்பாளர், அப்பாவி விவசாய தொழிலாளர்கள் வேலை கேட்டு மனு கொடுத்தார்கள் என்பதற்காக மிரட்டலுக்கும் அலைக்கழிப்புக்குள்ளாக்கியுள்ளார். இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் துரைசாமி, பொருளாளர் மகாலிங்கம், ஒன்றியச் செயலாளர் முத்துசாமி ஆகியோர் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 100 நாள் வேலை கேட்டு நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்ப தற்காக, ஆத்து பொள்ளாச்சி ஊராட்சி மன்ற பணித்தள பொறுப்பாளர் விவசாய தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்து போராட்டம் நடத்தியதற்காக மிரட்டல் விடுத்துள்ளார். 31 பேருக்கும் வேலை தரச் சொல்லி ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில் உத்தரவிட்டும், சம்மந்தப்பட்டவர்களுக்கு, வேலை தராமல், வேலைக்கு வரவில்லை என்று திருப்பி அனுப்பியுள்ளனர். அப்பாவி விவசாய தொழிலாளர்களை மிரட்டும் இதுபோன்ற நடவடிக்கையை விதொச வன்மை யாக கண்டிக்கிறது. குறிப்பிட்ட பணிக்காக மட்டுமே பணித்தள பொறுப்பாளர் நியமிக்க படவேண்டும். ஆனால், தொடர்ச்சி யாக ஒருவரே பணித்தள பொறுப்பாளராக இருப்பது சரியான அணுகுமுறை இல்லை. விவசாய கூலிகளை மிரட்டிய வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
நான்கு பேர் கொலை வழக்கு: இருவர் சரண், ஒருவர் கைது
திருப்பூர், செப். 6 - பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகு தியில் நான்கு பேர் கொலை செய்யப் பட்ட வழக்கின் குற்றவாளிகள் 2 பேர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து கள்ளக்கிணறு பகுதியில் ஞாயி றன்று இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட னர். இச்சம்பவத்தில் ஏற்கனவே செல்ல முத்து என்பவர் கைது செய்யப்பட்டிருந் தார். இந்நிலையில் புதனன்று கொலை வழக்கில் தொடர்புடைய வெங்கடேஷ் என்பரின் தம்பி குட்டி (எ) ராஜ்குமார் (21) மற்றும் விஷால் (எ) சோனை முத்தையா (22) ஆகியோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். மாநகர காவல் துறையினர் சரண டைந்த இருவரையும், மாவட்ட காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பல்லடம் அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளி கள் இருவரையும், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று வைத்து காவல் துறை யினர் விசாரணை நடத்தினர். பல்லடம் துணைக் காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் கோவை சரக டிஐஜி சரவண சுந்தர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமி நாதன் ஆகியோர் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டனர். மேலும், முக்கிய குற்றவாளி வெங்க டேஷ் தலைமறைவாக இருக்கும் நிலை யில், கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கிய வெங்கடேஷின் அப்பா ஐய் யப்பனை புதனன்று காவல் துறை யினர் கைது செய்தனர்.
முதுநிலை பட்ட வகுப்புகளுக்கு இன்று கலந்தாய்வு
திருப்பூர், செப். 6 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கு முதுநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, முதல் கட்ட கலந்தாய்வு வியாழக் கிழமை நடைபெறுகிறது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெ றும். கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியம் (22), ஆங்கில இலக் கியம் (18), பொருளியல் (18), எம்காம் (40), எம்காம் சர்வதேச வணிகம் (40), எம்.எஸ்ஸி கணினி அறிவியல் (25), இயற்பியல் (36), வேதியியல் (19), கணிதம் (50), விலங்கியல் (40), ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் (20) ஆகிய முதுநிலைப் பட்ட வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. கலந்தாய்விற்கு வருப வர்கள் தங்கள் இளநிலைப் பட்ட வகுப்பின் அனைத்துப் பரு வங்களின் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், 10, 11 மற்றும் +2 மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவிலான நிழற்படங்கள் 6 மற்றும் கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையுடன் பெற்றோரையும் அழைத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்துறை தலைவருக்கு சிறந்த கல்வியாளர் விருது
அவிநாசி, செப்.6- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தலைவருக்கு சிறந்த கல்வியாளர் விருது கிடைத்துள்ளது. இவ ருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் வாழ்த்துத் தெரிவித்தனர். அவிநாசி அரசு கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வருபவர் போ. மணிவண்ணன். இவர், 18க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக குறும்படங்கள், ஆவணப்படங்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி யமைக்காக தமிழ் செம்மல், நூலக ஆர்வல ருக்கான அரங்கநாதன் விருது ஆகிய அரசு விருதுகள் பெற்றுள்ளார். மேலும் இவர் எழுதிய ‘பெய்த நூல்’ என்ற கவிதைத் தொகுப்பு கேரள அரசின் பாடத்திட் டத்திலும், “வெண் தரிசு நிலம்’ என்ற புதினம் கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள் ளன. இந்நிலையில், 28 ஆண்டுகள் கல்விப் பணியாற்றியதற்காகவும், பள்ளி கல்லூரி மற் றும் பல்கலை அளவில் சிறப்பான கல்விப் பங் களிப்பை ஆற்றியதற்காகவும் சிறந்த கல்வி யாளர் விருது கோவை நிர்மலா கல்வி நிறு வனம் சார்பில் செவ்வாயன்று வழங்கப்பட் டது. இதைத்தொடர்ந்து, அவிநாசி அரசு கல் லூரி முதல்வர் ஜோ.நளதம், பேராசிரி யர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் போ. மணிவண்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்து பாராட்டினர்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேளாண்துறை அறிவுரை
உடுமலை, செப்.6- உடுமலை பகுதிகளில் வறட்சி நிலவு வதால் விவசாயிகள் தண்ணீரை சிக்கன மாக பயன்படுத்துவது குறித்து வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் போதியஅளவு பருவமழை இல்லாமல் போனதால் பல பகுதிகளில் விளைநிலங்களுக்கு தண்ணீர் இல்லா மல் விளைபயிர்கள் காயும் நிலை ஏற்பட் டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு, கிடைக்கும் தண்ணீரை எப் படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை கூறியுள்ளது. அதன்படி விவசாயிகள் விளை நிலங்ளை உழவு செய்து நீரை சேமித்து சிக்கனப்படுத்தலாம். சரிவுக்கு குறுக் கால உழவு போட வேண்டும். சாகுபடி நிலங்களில் பண்ணை குட்டை அமைக்க லாம். வயல்களில் வரப்புகளை உயரப் படுத்தி நீரின் வேகத்தை குறைக்கலாம். சோளம், கம்பு வெங்காயம், தக்காளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்து தண்ணீரை மிச்சப்படுத்தலாம். மேலும் வெங்காயத்திற்கு உச்சி கரை நனையா மல் தண்ணீர் பாய்ச்சுவது நல்லது. களர், உவர் நிலங்களில் நீரின் அளவைக் கட் டுப்படுத்த பாத்தி பாசனம் செய்து நீரின் அளவை குறைக்கலாம். பொதுவாக வயல்கள் விவசாயம் செய்யாத நாட்களில் தக்கபூண்டு, கொளுஞ்சி, சணப்பை போன்ற தாவ ரங்களை பயிர் செய்து நீர்த்தேவையை மிச்சப்படுத்தலாம், தென்னை நார்க் கழிவுகளை பயன்படுத்தி நீரை மிச்சப் படுத்தலாம். வறட்சியை 10 நாட்கள் வரை தாங்கக்கூடிய மெத்தலோ பாக்டி ரியா (பிஜிபிஆர்) அடிக்கலாம். இவை பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி அளவு காலை அல்லது மாலை நேரத் தில் தெளிக்கலாம். 15 நாட்கள் இடை வெளி விட்டு திரும்பவும் தெளிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.
பல்லடம், திருப்பூரில் சிபிஎம் பிரச்சார இயக்கம்
திருப்பூர், செப். 6 - ஒன்றிய அரசின் மோசமான கொள் கைகளால் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு உருவாக்காததைக் கண்டித்து செப்டம்பர் 7ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மறியல் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு ஒன் றிய பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. தெற்கு ஒன்றியத்தில் ஐந்து மையங் களில் தெருமுனை கூட்டம் நடைபெற் றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.ரங்கராஜ், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.கணேசன், தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.சுப்பிரமணியம், எஸ். குணசேகரன், எஸ்.சண்முகம், கே. வேலுசாமி, எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதேபோல் செப்டம்பர் 7 மறியல் போராட்ட நோக்கத்தை விளக்கி பல்ல டம் ஒன்றிய பகுதிகளில் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. காமநாயக்கன்பா ளையத்தில் ஒன்றியச் செயலாளர் ஆர். பரமசிவம் தலைமையில் துவங்கிய பிரச்சார இயக்கத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றி னார்.
பிரச்சார பயணம் புளியம்பட்டி, கர டிவாவி, பருவாய், லட்சுமி மில்ஸ், சுக் கம்பாளையம், காளிவேலம்பட்டி, மாணிக்காபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த பிரச் சார இயக்கத்தில் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.வி.சுப்பிரம ணியம், சி.முருகேஷ், பி.ஆர்.ராஜேந்தி ரன், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அவிநாசி அவிநாசியில் மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி அவிநாசி நகர கிளைகள் சார்பில் சேவூர் சாலையில் தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனி சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல செவ்வாயன்று திருப் பூர் வடக்கு ஒன்றியம் மும்மூர்த்தி நகர், சக்திநகர், பழனிச்சாமி நகர், குருவாயூ ரப்பன் நகர், பிச்சம்பாளையம் புதூர், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் மறியல் விளக்க தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. இந்த பிரச்சார இயக்கத்தை கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் எஸ்.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன், பஞ்சாலை சங்க மாவட்டத் தலைவர் கே.பழனிச்சாமி, கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகா மணி உள்பட பலர் பங்கேற்றனர். அங்கேரிபாளையத்தில் நடை பெற்ற தெருமுனை கூட்டத்தில் மாவட் டச் செயலாளர் எஸ்.முத்துகண்ணன் சிறப்புரை ஆற்றினார். பலர் பங்கேற்ற னர்.
ஏலமின்றி கனி மார்க்கெட் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்க அறிவுறுத்தல்
ஈரோடு, செப்.6- கனி மார்க்கெட் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய வணிக வளாகத்தில் கடை ஒதுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறி வுறுத்தியுள்ளார். ஈரோடு மாநகரில் பன்னீர்செல் வம் பூங்கா பகுதியில் அப்துல் கனி மார்க்கெட் அமைந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சந்தை செயல்பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் கனி மார்க்கெட்டிற்கு புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டது. கட்டுமான பணிகள் தொடங்குவ தற்கு முன்பும், அதன்பிறகும் ஏற்க னவே கனி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு புதிய வணிக வளா கத்தில் முன்னுரிமை அளிக்க வேண் டும் என்று கோரிக்கை விடப்பட்டது. அதன்படி வாய்மொழி உத்தரவும் அளிக்கப்பட்டது. ஆனால், அப்துல் கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டி முடித்து திறக்கப்பட்ட பிறகு மாநக ராட்சி நிர்வாகம் ஏலம் விட முயன்றது. இதற்கு கனி மார்க்கெட் வியாபாரி கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ரூ.8 லட்சம் வைப்புத்தொகை மற் றும் குறைந்தபட்ச மாத வாடகை ரூ.34 ஆயிரம் என்ற அளவில் மீண் டும் ஏலம் விட முயற்சிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் நீதிமன்றம் சென்று, இந்த ஆண்டு இறுதிவரை இடத்தைக் காலி செய்ய தேவையில்லை என ஆணை பெற்ற னர். அதற்குள் மாநகராட்சி நிர்வாகம் கடைகளை அப்புறப்படுத்தியது. இதுகுறித்து தீக்கதிரில் விரிவான செய்தி வெளியானது. இதனிடையே நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆகி யோர் முன்னிலையில் கனி வியாபாரி கள் கலந்த கொண்ட கூட்டம் நடை பெற்றது. இதில் வைப்புத்தொகை ஏதுமின்றி குறைந்த வாடகையில் கனி மார்க்கெட் வியாபாரிகளுக்கு வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்க வேண்டும். எஞ்சியுள்ள கடைகளை ஏலம் விடலாம் என அமைச்சர் கே. என்.நேரு அறிவுறுத்தியதாக கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலை வர் நூர் சேட் தெரிவித்தார்.
குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா கட்டணம் உயர்வு
சேலம், செப்.6- சேலம் மாவட்டம், ஏற்காடு மலையடி வாரத்தில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடு முறை நாட்களில் ஏராளமானோர் வந்து செல் வது வழக்கம். இந்நிலையில், நுழைவு கட்ட ணமாக ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்த நிலை யில், தற்போது பெரியவர்களுக்கு ரூ.50 ஆக வும், 5 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்கா வில் வீடியோ எடுப்பதற்கு இதுவரை கட்ட ணம் ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கார் மற் றும் பெரிய வாகனங்கள் நிறுத்த கட்டணம் ரூ.50 ஆகவும், இரண்டு சக்கர வாகனங்கள் நுழைவு கட்டணம் ரூ.20 என வசூலிக்கப்பட உள்ளது என சேலம் குரும்பப்பட்டி உயிரி யல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.