உடுமலை, மார்ச் 3- ஊராட்சி மன்ற தீர்மானம் இல்லா மல் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி புதனன்று ஜல்லி பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை தாலுகா ஜல்லிபட்டி ஊராட்சியில், தீர்மானம் எதுவும் நிறை வேற்றப்படாமல், ஊராட்சி மன்ற தலை வர் தன்னிச்சையாக பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முறையான ரசீதும் வழங்காமல் நூற்றுக்கும் மேற் பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கி வருகிறார். எனவே, இவ்வாறு ஊராட்சி நிர்வாகத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களின் பணத் தை முறைகேடு செய்யும் ஊராட்சி மன்ற தலைவரின் மீது நவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊராட்சி பகுதி முழுவதும் குப்பைகள் அகற்றப் படாமல் சுகாதாரக் கேடு ஏற்படும் வகை யில் உள்ளதை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி புதனன்று (மார்ச் 2) ஜல்லிபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். மேலும், ஒன்றிய செயலா ளர் கி.கனகராஜ், கிளை செயலாளர் மாணிக்கவாசகம், ரமேஸ், சங்கீதா, பெருமாள்சாமி, மாசாணி, ரவி, சுரேஷ், கருப்புசாமி, மணியன், சந் தோஷ், அஜித் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.