districts

img

புதர் மண்டியுள்ள அம்மா பூங்காவை சீரமைத்து, திறக்க பள்ளிபாளையம் மக்கள் கோரிக்கை

பள்ளிபாளையம், பிப்.4- புதர்மண்டி காணப்படும் அம்மா பூஞ் காவை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிபாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், காரடச்சநல்லூர் ஊராட்சிக்குட் பட்ட தாஜ் நகர் பகுதியில், அதிமுக ஆட்சிக் காலத்தின் நிறைவில் பல லட்சம் ரூபாய் மதிப் பீட்டில், அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் அம்மா விளையாட்டு பூங்கா அமைக்கப்பட் டது. தாஜ் நகர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் இப்பூங்காவை பயன்படுத்தி வந்த நிலையில், போதிய பராமரிப்பில்லாததால் பொதுமக்கள் பூங்காவிற்கு செல்வதை தவிர்க்க தொடங்கினர். இதனால் இப்பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. தற்போது பூங்காவை சுற்றிலும் புதர்மண்டி காணப்படுவதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் புகலிடமாக மாறியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் கூறுகையில், அதிமுக ஆட் சிக்காலத்தில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணியால் இந்த பூங்கா திறந்து வைக்கப்பட்டது. தாஜ் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாலை நேரங்களில், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து பூங்காவில் விளையாடி மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில், பூங்கா கடந்த ஆறு மாதங்களாகவே பூட்டி கிடக்கி றது. பல லட்சம் ரூபாய் செலவீட்டில் அமைக் கப்பட்ட அம்மா பூங்கா மீண்டும் பயன்பாட் டுக்கு வரும் பட்சத்தில், இப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக காடச்சநல்லூர் ஊராட்சி  மன்ற தலைவர் சரோஜாவிடம் கேட்டபோது, ஐந்து நிமிடத்தில் அழைப்பதாக சொன்ன வர் மீண்டும் இணைப்பில் வரவில்லை. காடச்சநல்லூர்  பஞ்சாயத்து துணைத்தலை வர் திருமூர்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அம்மா உடற்பயிற்சி மையத் தில் உள்ள உபகரணங்கள் பழுதடைந்துள்ள தால், அதை மாற்றுவதற்கான நிதியை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். மேலும், அம்மா  பூங்கா தினந்தோறும் செயல்பட்டு வருவதாக வும் தெரிவித்தார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகத்தை தவிர, அம்மா மினி கிளினிக்குகள், அம்மா பூங்கா  உள்ளிட்டவை மாநிலம் முழுவதும் பல்வேறு  பகுதியில் அமைக்கப்பட்டது. ஆனால், அது அனைத்தும்  தற்போது முடங்கியுள்ளது. ஆட் சியில் இருப்பவர்கள், மக்கள் நலன் சார்ந்த  திட்டங்களை உருவாக்கும் போது, பொது வான பெயர்களில் கட்சி பேதம் இல்லாமல் திட்டங்களை உருவாக்கினால் இதுபோல் மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்கலாம்.  தற்போதுள்ள திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.