districts

பள்ளிபாளையம் வேலுச்சாமி படுகொலை வழக்கு - கடந்து வந்த பாதை

கொலையாளி- விஸ்வ இந்து பரிசத் நிர்வாகி

இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியான சிவா என்கின்ற சிவக்குமார் சங்பரிவார் அமைப்பான விஸ்வ ஹிந்து பரிசத்தின் மாவட்ட துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்தார். இதேபோல், ராஜ்கமல் என்கின்ற ராஜேந்திரன் பாஜகவின் வர்த்தகப் பிரிவில் பொறுப்பில் இருந்து வந்தார்.

தண்டனை விவரம்

  • இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 பி-ன் படி கூட்டு சதி செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை. 
  • இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றச் செயலுக்காக அனைத்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை.
  • இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 341 இன் கீழ் தடுத்து நிறுத்திய குற்றத்தில் ஈடுபட்டதற்காக குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரு வருட சிறை தண்டனை  
  • மேலும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 149 தடுத்து நிறுத்தி ஆயுதங்களுடன் சட்டவிரோதமாக ஒன்றுகூடி தாக்கியதற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை
  • ஒவ்வொரு குற்றவாளிகளுக்கும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 ஆண்டு சிறை

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றொரு வழக்கான இளம்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து, அதனை ஆபாச வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்ட குற்றத்திற்கு சிவா என்கின்ற சிவகுமாருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து அதனை பாதிக் கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி யது குறிப்பிடத்தக்கது.

உத்வேகம் அளிக்கக் கூடிய தீர்ப்பு - அரசு சிறப்பு வழக்கறிஞர்

உத்வேகம் அளிக்கக் கூடிய தீர்ப்பு - அரசு சிறப்பு வழக்கறிஞர் இதற்கிடையே, இந்த வழக்கில் அரசின் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகி திறன்பட வாதிட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திருமலைராஜனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதன்பின்னர் வழக்கறிஞர் திருமலைராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  12 ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் நீதி நிலை நாட்டப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. குறிப்பாக சாமானிய மக்கள் பாதிக்கப்படும் பொழுது அவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் அனைவருக்கும் இத்தீர்ப்பு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.  சாமானிய மக்கள் நம்பிக்கையோடு தங்கள் நீதிக்காக போராட முடியும் என்பதனை இத்தீர்ப்பு உணர்த்துகிறது. இவ்வழக்கில் ஏழாவது குற்றவாளியான ஆமையன் என்கின்ற ரவி மிகக்கொடூரமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.  இவ்வழக்கில் முக்கியமான குற்றவாளியான சிவா என்கின்ற சிவக்குமார் தான், ஆமையன் என்கிற ரவியின் கொலை வழக்கிலும் முக்கியமான குற்றவாளி. இருப்பினும்; ஆமையன் என்கிற ரவியின் தாய், தந்தை மற்றும் மனைவியே பிறல் சாட்சியாக மாறினர். இப்படிப்பட்ட சூழலில் வேலுச்சாமி வழக்கில் நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது சாமானியனுக்கும் நீதி கிடைக்கும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்களுக்கு இது உத்வேகம் அளிக்கக் கூடிய தீர்ப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தையே உலுக்கிய கந்து வட்டி கும்பலால் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர் பள்ளிபாளை யம் வேலுச்சாமி வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட அனைவரும்  குற்றவாளிகள்   என அறி வித்து திங்களன்று பிற்பகல் 2.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக, இந்த வழக்கு கடந்த வந்த பாதை வருமாறு… 

பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த  சிறு பான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த விசைத் தறி தொழிலாளி தனது குடும்ப வறுமை யின் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த சிவா என் கின்ற சிவகுமாரிடம் கடன் பெறுகிறார்.  இதன்பின்னர், விசைத்தறி தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை செலுத்த முடியாத சூழல் ஏற்படு கிறது. அப்போது, மேற்கண்ட குடும்பத்தைச் சார்ந்த இளம்பெண்ணை மிரட்டி சிவகுமார் மற்றும் ஆமையன் என்கின்ற ரவி ஆகியோர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு, அதை வீடியோ பதிவு செய்து இணையதளத்தில்  வெளியிடு கின்றனர்.  

இதனால் அதிர்ச்சிக்குள்ளான மேற் கண்ட குடும்பம் அவ்வீடியோ பதிவை அழிப் பதற்காகவும், தங்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைக்கு நீதி கிடைத்திடவும் அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பள்ளிபாளையம் பகுதி அக்ரஹாரம் கிளைச் செயலாளராக செயல்பட்டு வந்த தோழர் சி.வேலுசாமி அணுகுகின்றனர்.  அவர் பள்ளிபாளையம் காவல்நிலை யத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை அழைத் துச் சென்று புகார் அளித்ததோடு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும்  நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் வீடி யோவை அழிக்கவும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் புகார் மனு அளிக்கின் றார்.  இது தொடர்பான செய்தி பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியாகி சம் பந்தப்பட்ட குற்றவாளியான சிவா என்கின்ற சிவகுமாரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.  இதன்பின் ஜாமினில் வெளியே வந்த சிவகுமார் தனது கூட்டாளிகளான ராஜ்கமல் என்கின்ற ராஜேந்திரன், பூபதி, மிலிட்டரி கணேசன், அருண்குமார், அன்பு என்கின்ற அன்பழகன், ஆமையன் என்கின்ற ரவி ஆகி யோர் உதவியுடன் தோழர் வேலுசாமியை கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.  

இதனை அறிந்த தோழர் வேலுச்சாமி, பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கடந்த 10.03.2010 ஆம் தேதியன்று,  மேற்கண்ட நபர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி பாதுகாப்பு கேட்டு  புகார் அளித்துவிட்டு இரவு 10 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது மேற்கண்ட குற்ற வாளிகள் தோழர் வேலுச்சாமியை கொடூர மான முறையில் வெட்டி படுகொலை செய்த னர்.    தமிழகத்தையே உலுக்கிய இச்சம்ப வத்தை உள்ளூர் காவல்துறை விசாரித்தால் உரிய நீதி கிடைக்காது  என்று, சிபிசிஐடி  விசாரணைக்கு உத்தரவிட கோரி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.  

இதையடுத்து அன்றைய தமிழக முதல் வர் கலைஞர் கருணாநிதி, சிபிசிஐடி விசார ணைக்கு உத்தரவிட்டு அதனை சட்டமன்றத் தில் 16.3.2010 அன்று அறிவித்தார். அதனடிப்படையில் சிபிசிஐடி காவல் துறை ஆய்வாளர் ராஜன் தலைமையிலான குழுவினர் மேற்கண்ட குற்றவாளிகளை தங்க ளது காவலில் எடுத்து விசாரணை நடத்தி நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த னர்.  அதேநேரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பாக அரசு சிறப்பு வழக்கறிஞராக பி.திரு மலைராஜனை நியமிக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது. இதனடிப்படையில் வழக்கறிஞர் திருமலை ராஜன், அரசின் சிறப்பு வழக்கறிஞ ராக இவ்வழக்கில் நியமிக்கப்பட்டார்.

 இதற்கிடையே, மேற்கண்ட வழக்குகளில்  தொடர்புடைய ஆமையன் என்கின்ற ரவி குற் றத்தை ஒப்புக்கொண்டு அரசு தரப்பு அப்ரூவ ராக மாறினார். அடுத்த சில தினங்களில் ஆமையன் என் கின்ற ரவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பள்ளிபாளையம் காவேரி ஆற் றில் சடலமாக மீட்கப்பட்டார். இதன்பின் இவ்வழக்கில் விரைந்து நீதி  கிடைப்பதற்கு இடையூறாக சாட்சிகளை மிரட்டுவது, வழக்கில் ஆஜராக மறுப்பது, உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தில் அவசியமற்ற மனுக்களை தாக்கல் செய் வது என சுமார் 12 ஆண்டுகளாக குற்றம் சாட் டப்பட்டவர்களால் வழக்கு விசாரணை தாம தப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் திங்களன்று (மார்ச் 14) பிற்பகல் 2 மணி அளவில் நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி எஸ்.சசி ரேகா தீர்ப்பளித்தார். இதில் குற்றம்சாட்டப் பட்ட அனைவரும் குற்றவாளிகள் என அறி வித்ததுடன், அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, மூன்றாண்டு கால கடுங்காவல் தண்டனை, மேலும் ஓராண்டு கால தண் டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

குடும்பத்தை  பாதுகாத்த மார்க்சிஸ்ட்   கட்சி

படுகொலை செய்யப்பட்ட தோழர் வேலுச்சாமியின் குடும்பத்தை பாதுகாப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் நிதி வசூல் செய்து தோழர் வேலுச்சாமியின் குழந்தைகளான தாரணி, ரேணுகா என்கின்ற லீலாவதி, வினோத் என்கின்ற ஸ்டாலின் ஆகியோர் பெயரில் தலா ஒரு லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி மேற்கண்ட குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை ஏற்றுக் கொண்டது.
இதேபோல், சமூக ஆர்வலரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜாபர் அலி என்பவர் மேற்கண்ட குழந்தைகளின் கல்வி உதவித் தொகை முழுவதையும் ஏற்று உதவி செய்து வந்தார்.