திருப்பூர், செப்.29 – தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பல்லடம், பொங்க லூர் ஒன்றிய கிளைத் துவக்க விழா மற்றும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் உறுதுணையாக செயல்பட்ட இல் லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய நிகழ்வுகள் பல்லடம் பிஎம்ஆர் சுப்பு லட்சுமி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடை பெற்றது. இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கலையரசி தலைமை ஏற்றார். பல்ல டம் கிளை செயலாளர் சரண்யா வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் ராணி ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பல்லடம் ரெயின்போ ரோட்டரி தலைவர் சுந்தர்ராஜன், உதவி ஆளுநர் கவிதா மற்றும் ஆசிரிய பயிற்றுநர் மாரியப்பன் ஆகியோர் பல்லடம் ஒன்றியம் சார்பாக கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கௌரிசங்கர் அறிவியல் இயக்க செயல்பா டுகள் குறித்து கருத்துரை வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பல்லடம், பொங்கலூர் கிளை பொறுப் பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்திப் பேசி னார். மாவட்டத் துணைத் தலைவர் ஸ்ரீராம் குமார் ஆயிரம் ஆயி ரம் அறிவியல் திருவிழா குறித்து உரையாற்றினார். மாவட்ட கருத்தாளர் அஜித் குமார் மந்திரமா தந்திரமா என்ற தலைப்பில் அறிவியல் மேஜிக் செய்து காட்டினார். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பல்ல டம் கிளை பொருளாளர் நிவேதா நன்றி கூறினார்.இறுதியில் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதனுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.