திருப்பூர், செப். 6 - பல்லடம் செட்டிபாளையம் சாலையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடை (எண்:1830) மக்கள் போராட்டத்தால் மூடப்ப டுவதாக பல்லடம் வட்டாட்சியர் அறிவித் தார். செட்டிபாளையம் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதன்கிழமை முதல் இந்த கடை செயல்படாது என பல்லடம் வட் டாட்சியர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபா ளையம் சாலையில் அமைந்துள்ள எண் 1830 டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சனை கள் ஏற்படுவதாகவும், விபத்துக்கள் மட்டு மின்றி கொலை, கொள்ளைக்கு காரண மாக இந்த கடை இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு முறை இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.இத னிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் கள்ளகிணர் பகுதியில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொல்லப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. குறிப்பாக மதுக் குடித்ததை தட்டிக் கேட்டதைத் தொடர்ந்துதான் பிரச்சனை ஏற் பட்டு கொலை நடைபெற்றதாக கூறப்படு கிறது. எனவே இந்த டாஸ்மாக் மதுக்க டையை அகற்ற வலியுறுத்தி பொது மக்கள் சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நூற்றுக்கு மேற்பட்டோர் புதனன்று டாஸ்மார்க் கடை முன்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் வட்டாட்சியர், போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினார். இந்த பேச்சுவார்த்தை முடிவில் செட்டி பாளையம் சாலை டாஸ்மார்க் கடை இங்கு செயல்படாது, தற்காலிகமாக மூடப்படும் எனத் தெரிவித்தார். இந்த கடையை இடமாற் றம் செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார் என்றும் அவர் கூறினார். டாஸ்மாக் மதுபானக் கடை மூடப்பட் டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.