districts

img

சூரிய ஒளியில் ஓவியம் வரைந்து அசத்தல்

கோவை, ஜன.13- தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை ஜன.15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல் வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்க ளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வரு கிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் பொங்கல் விழாவை மாணவர்கள் வெகுவி மர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பொங்கல் பண்டிகையின் முக்கிய மான நிகழ்வாக தமிழர்களின் வீர விளை யாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு விமர்சை யாக நடைபெறுவது வழக்கம். இந்நிலை யில், ஜல்லிகட்டை ஊக்குவிக்கும் விதமாக கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த  நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி.ராஜா, பூதக் கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் ஜல்லிகட்டு ஓவியத்தை வரைந்துள்ளார். இதில் ஜல்லிக்கட்டு காளையும், மாடுபிடி வீர ரும் இடம் பெற்றுள்ளனர். இதற்காக 7  மணி நேரம் எடுத்து கொண்டுள்ள இவர்  தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தை யும் உலகிற்கு பறைசாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.