districts

img

திருப்பூரில் பெண் ஓவியர்களின் ஓவிய கண்காட்சி

திருப்பூர், பிப்.28- திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில்  உலக மகளிர் தினத்தையொட்டி பெண் ஓவி யர்களின் ஓவிய கண்காட்சி நடைபெற்றது.  உலக மகளிர் தினத்தையொட்டி கொங்கு பகுதியைச் சார்ந்த 12 பெண் ஓவியர் களின் ஓவியங்கள் கண்காட்சி திருப்பூர்  மக்கள் மாமன்ற நூலகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியை திருப்பூர் ஸ்ரீ விவேகா னாந்தா சேவாலயம் அமைப்பைச் சார்ந்த கல்வியாளர் ஜோதிலட்சுமி திறந்து வைத் தார். இந்நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி ஓவியர் சின்ன ராஜ் பேசினார். இதில், எட்டுத்திக்கும் என்றத் தலைப்பில் எட்டு இடங்களில் நடக்க விருக்கும் பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சியின் முதல் இடம் திருப்பூராகும்.பெண்கள் இந்த நூற்றாண்டில் எழுச்சி பெற்று பல துறைகளில் முன்னேறி வரு வது போல் ஓவியத் துறையிலும் முன்னேறி வருகின்றனர். அவர்களது ஓவியங்கள் உணர்ச்சிக் குவியலாக இருக்கின்றன என்று  இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய கல்வியா ளர், திருப்பூர் காட்டன்வேலி பள்ளி நிர்வாகி கவிப்ரியா ராஜீ குறிப்பிட்டார். முன்னதாக, ஓவியர் அங்காளீஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். எழுத்தா ளர் சுப்ரபாரதிமணியன், பெண் மைய ஓவி யங்கள்  இலக்கியப் படைப்புகளின் இன் னொரு பரிமாணமாய் விளங்குவதை குறிப் பிட்டார். இதைத் தொடர்ந்து சுப்ரபாரதிமணி யனின் இரு ஆங்கில மொழிபெயர்ப்பு நாவல்கள், அழகு பாண்டி அரசப்பனின் ஒரு  குத்துப் பருக்கை சிறுகதைத் தொகுப்பு, பொன் சண்முகசுந்தரத்தின் வகுப்பறை கவி தைத் தொகுப்பு ஆகிய நூல்களின் அறிமுக  நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் மாமன்றம் சி. சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.