districts

img

“உப்பு ஹட்டுவ” பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரி, மார்ச் 18- நீலகிரியில் படுகர் இன மக்களின் “உப்பு ஹட்டுவ” பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் “உப்பு ஹட்டுவ” பண்டிகை வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையையொட்டி, அவரவர் வீட்டி லிருந்து உப்பு, பச்சை கடலை, புல் வகைகள் என கொண்டு  வந்து, ஆற்றில் கரைத்து அந்த தண்ணீரை மாடுகளுக்காக வைத்து வழிபடுவர். அதன்பின்னர் மாடுகளை தங்களது கிராமத்திற்கு அருகே  உள்ள எம்மட்டி (மாடுகள் மேய்க்கப்படும் இடம்) என்ற இடத்துக்கு அழைத்து சென்று, அங்கு தொழுவங்களில் அடைத்து, மாடுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவர். இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் மழை பெய்து, பசுமை திரும்பிய  பிறகு மாடுகளை தங்களது கிராமங்களுக்கு அழைத்து வருவர். இந்த பாரம்பரிய வழக்கம் தொடர்ந்து கடைபி டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திங்களன்று உப்பு ஹட்டுவ பண்டிகை கோலாகமாக கொண்டாடப்பட்டது. இதில் படுகர் இன மக்கள் உற்சாகமாக கலந்து கொண்ட னர்.