districts

img

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வரத்து குறைவு

கோபி, ஜன.27- கோபி கீழ்பவானி பாசன பகுதி யில், வியாபாரிகள் கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் செய்வ தால் நேரடி நெல்கொள்முதல் நிலை யங்களில் நெல் வரத்து குறைந்துள் ளது. ஈரோடு மாவட்டம், கீழ்பவானி பாசன பகுதியில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நெல் அறுவடை தொடங்கி அறுவடை பணிகள் நடை பெற்று வருகிறது. இதனை அடுத்து,  விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கடந்த 2ம் தேதி முதல் உக்க ரம், நகரணை, நாதிபாளையம், புது வள்ளியம்பாளையம், அளுக்குளி, கலிங்கியம், கூகலூர் உள்ளிட்ட இடங்களில் நேரடி நெல் கொள்மு தல் நிலையங்கள் திறக்கப்பட் டது. இந்நிலையில், கோபிசெட்டிபா ளையம் அதன் சுற்றுவட்டார பகு தியில் உள்ள கீழ்பவானி பாசனத்தில்  நெல் அறுவடை தொடங்கி நடை பெற்று வரும் சூழலில், விவசாயி களிடையே வியாபாரிகள் நேரடியாக சென்று கூடுதல் விலைக்கு கொள் முதல் செய்வதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக, உக்கரம், புதுவள் ளியம்பாளையம், கலிங்கியம் உள்ளிட்ட சில நேரடி நெல்கொள்மு தல் நிலையங்களில், கடந்த 20 நாட் களாகியும் நெல் வரத்து இல்லாமல் காணப்பட்டு வருகிறது.  அரசின் நேரடி நெல்கொள்மு தல் நிலையங்களில், ஊக்கத்தொ கையுடன் சன்னரகத்திற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.23.10க்கும், மோட்டா ரகத்திற்கு ரூ.22.65விற்கும் கொள்மு தல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், நெல் வியாபாரிகள் விவசா யிகளிடையே நேரடியாக சென்று சன்னரகம் கிலோ ஒன்றுக்கு ரூ.27 எனவும், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2700 முதல் கூடுதலாகவும் கொள் முதல் செய்கின்றனர். இதனால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்க ளுக்கு நெல் வரத்து குறைந்துள் ளது. இதுவரை 34 இடங்களில் நேரடி  நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், திறக் கப்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இதுவரை 1000டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. தொடர்ந்து கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால், நேரடி நெல்கொள்முதல் நிலையங் களில் விரைவில் நெல்வரத்து அதி கரிக்கும் என தமிழ்நாடு வாணிபக்க ழக அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.