districts

உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

உதகை, ஆக.8- உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதகை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் ஏற்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடுகள் மற்றும் கழிவுநீரை வெளியேற்றுவதால் சுற்றுசூழலுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகிறது. மலக்குழி மரணங்களை தடுக்கவும், சுற்றுசூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் கழிவுகளை அகற்றும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து உரிமம் பெற்று கொள்ள வேண்டும். உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டடத்தில் இருந்து மனிதகழிவுகளை அகற்றுவது, கொண்டு செல்வது கூடாது. பொது இடங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் மனித கழிவுகள் உள்ளிட்ட அனைத்து வகையான கழிவுகளை கொட்டினால், எவ்வித முன்னறிவிப்புமின்றி வாக னங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அப ராதம் விதிக்கப்படுவதுடன், குற்ற வியல் நடவடிக்கை எடுக்கப்படும் என  அறிவிக்கப்பட்டது.

மேலும், பயன்படுத் தும் வாகனங்களின் பதிவுப் புத்தகம் மற்றும் அனுமதிச் சீட்டில் “கழிவு நீர்  அகற்றும் வாகனம்” என பதிவு செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நகராட்சி நிர்வாக ஆணையாளர் உத்தரவின் பேரில் ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மேற்பார்வையில், நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் உதகையில் நடைபெற்றது. நகர்நல அலுவலர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். இதுகுறித்து நகராட்சி அதி காரிகள் பேசுகையில், கழிவுநீர் அகற் றும் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும். கழிவுநீர் அகற்றும் வாகனம் ஓட்டுபவர்கள், உடன் பணியில் இருப்பவருக்கு தலா ரூ.10 லட்சத்திற்கு காப்பீடு செய்ய வேண்டும். உரிமம் பெற்ற வாகனங்கள் தான் பயன்படுத்தபடுகிறதா? என நக ராட்சி அதிகாரிகள் மட்டுமின்றி போக்கு வரத்து அதிகாரிகளும் கண்காணிப் பார்கள். உரிமம் பெறாத வாகன உரி மையாளர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும்.  வாகனங்களில் தற்காலிக பிளாஸ் டிக் டேங்க் வைத்து கழிவுகளை அகற் றக்கூடாது. கழிவுநீர் அகற்றுவதற்கென டேங்கர் வசதி உள்ள வாகனத்தையே பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் அகற் றும் வாகனங்கள் மற்றும் பணிகளை முழுமையான கண்காணிப்பிற்குள் கொண்டு வர தனி கட்டணமில்லா எண், செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, என்றனர்.