திருப்பூர், மே 27- ஒன்றிய பாஜக அரசின் கொள்கை களை கண்டித்து திருப்பூர் மாவட் டத்தில் பல்வேறு இடங்களில் இடது சாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளியன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். விசைத்தறி, பனியன் உள்ளிட்ட ஜவுளித் தொழிலை பாதித்துள்ள பஞ்சு, நூல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அர சின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் இடதுசாரி கட்சி கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக பல்லடம் - கொசவம்பாளையம் சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் ஆர்.பரமசிவம் தலைமை வகித் தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பரமசிவம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரங்கசாமி ஆகியோர் கண் டன உரையாற்றினர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப் பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக, வியாழனன்று மேற் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் ஒன்றியத்தில் பள்ளிபாளை யம், அருள்புரம், மாணிக்காபுரம், காளிவேலம்பட்டி உள்ளிட்ட இடங் களில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் சிபிஎம் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணன், ஒன்றிய செயலாளர் ஆர்.பரம சிவம், இடைக்குழு உறுப்பினர்கள் முருகேஷ், துரை, மோகன் உட்பட திர ளானோர் பங்கேற்றனர்.
உடுமலை
உடுமலையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிபிஎம் உடுமலை நகரச் செயலாளர் கே.தண்டபாணி தலைமை வகித்தார். உடுமலை ஒன்றிய செயலா ளர் கி.கனகராஜ், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் என்.சசிகலா, இந்திய கம் யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பி னர் கே.எஸ்.ரணதேவ், நந்தகோபால், தாலுகா செயலாளர் வெ.சௌந்தர் ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் கே.ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, சிபிஎம் நிர்வாகி சுதா சுப் பிரமணி நன்றி கூறினார்.
தாராபுரம்
தாராபுரம் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகாக்குழு உறுப்பினர் ஆர்.வெங் கட்ராமன் தலைமை வகித்தார். இதில், தாலுகா செயலாளர் என்.கனகராஜ், பி.பொன்னுச்சாமி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினர் ரகுபதி, ரவி, விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, நகரச் செயலாளர் செந் தில்குமார், முத்தமிழ் வேந்தன் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.
அவிநாசி
அவிநாசி புதிய பேருந்து நிலையம் மற்றும் சேவூர் கைகாட்டி பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினர்கள் வெங்கடாசலம், பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி, திரு முருகன்பூண்டி நகரமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், ஒன்றியக்குழு உறுப் பினர்கள் வேலுச்சாமி, தேவி, சண்மு கம், ராஜ், மோகனசுந்தரம், முருகன், கருப்புசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சண்முகம், கோபால், செல்வராஜ், முத்துசாமி, ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கள் மாரிச்சாமி, ராசு வளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் தெற்கு நகருக்கு உட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர், பூச்சக் காடு, திருவிக நகர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த போராட்டத்தில் கட்சியின் மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்த ரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் மூர்த்தி, கவுன்சிலர் செல்வராஜ் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். வீரபாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ கவுன்சிலர் அருணாச்சலம் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.லட்சுமி, சிபிஐ சார்பில் வடிவேல், பாரதி, விசிக சார்பில் செல்வம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியாண்டிபாளையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் ராஜன் தலைமை வகித்தார்.
இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சி. மூர்த்தி, இடுவாய் ஊராட்சி மன்ற தலை வர் கே.கணேசன், சிபிஐ சார்பில் ஆர். வடிவேலு ஆகியோர் பேசினர். செட்டிபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் கோபால் தலைமை வகித் தார். இதில் முன்னாள் மாமன்ற உறுப்பி னர் கே.மாரப்பன், மூத்த தலைவர் கே.பழனிசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் சதீஷ் குமார், மாண வர் சங்க மாவட்ட துணை செயலாளர் ரேவந்த் குமார் உள்ளிட்டோர் பங்கேற் றனர். செட்டிபாளையம் கிளை செய லாளர் சுப்பிரமணியம் நன்றி கூறி னார். வெள்ளகோவிலில் கரூர் - கோவை பிரதான சாலை சந்திப்பில் சிபிஎம் நிர்வாகி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினர் கே.திருவேங்கடசாமி, தாலுகா குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்பட கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டனர். இதில் சமை யல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து வைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பப்பட் டது. பொங்கலூரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், பவித்ரா, ஒன்றிய செயலாளர் பாலன், சிபிஐ சார்பில் ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.