districts

வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவு

ஈரோடு, பிப்.22- பிப்.27 ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அத்தொகுதியிலிருந்து வெளி மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி யில் பிப்.27 ஆம் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்த லில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பில் கே.எஸ். தென்னரசு உட்பட 77 பேர் போட்டியிடு கின்றனர். தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பா ளர்களின் பெயர், சின்னம் பொருத்தப் பட்டு மாதிரி ஓட்டுப்பதிவும் நடத்தப் பட்டு, ஓட்டுப்பதிவுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டு உள்ளது. தேர்தலுக்கு முந்தைய நாளான பிப்.26 ஆம் தேதியன்று மின் னணு எந்திரங்கள் வாக்கு சாவடிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல் லப்படும். அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பிரசாரம் பிப்.25 ஆம் தேதி யன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறு கிறது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவ குமார் செய்தியாளர்களிடம் கூறுகை யில், இந்த இடைத்தேர்தலில் 100 சதவிகி தம் வாக்கு பதிவிற்காக பல்வேறு விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரு கின்றன. தேர்தலில் தற்காலிகமாக அனு மதி பெறாமல் இயங்கி வந்த 8 பணி மனைகள் அகற்றப்பட்டன. 14 பணி மனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதில் அனுமதி பெற்று 4 பணிமனைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தற்போது கிழக்கு தொகுதியில் இருக்கும் பணி மனைகள் அனைத்தும் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதுவரை தேர் தல் விதிமீறல் தொடர்பாக, கட்டுப்பாட்டு அறைக்கு 455 புகார்கள் வந்துள்ளன. இதில் 50 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. காவல் துறையினருக்கான தபால்  வாக்குப்பதிவு செவ்வாயன்று நடை பெற்றது. பதட்டமான வாக்குச்சாவடி களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் போலீ சாருடன் துணை ராணுவத்தினரும் பாது காப்பு பணியில் ஈடுபடுவார்கள். பிப்.25 ஆம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம்  நிறைவு பெறுகிறது. அன்று மாலை 5  மணிக்கு பிறகு ஈரோட்டில் தங்கியி ருக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த  அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர் தல் பணிக்காக வந்திருக்கும் அனை வரும் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். அப்போது யாரேனும் தங்கியிருப்பது உறுதி செய் யப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைப் படி நடவடிக்கை எடுக்கப்படும், என் றார்.