ஈரோடு, ஏப். 11- ஈரோடு மாவட்டத்தில் தூய்மைப் பணியா ளர் தொழிற்சங்க கூட்டமைப்பு இந்தியா கூட்ட ணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 18 வது நாடாளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதியன்று நடைபெறள்ளது. இத்தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட் டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட் பாளர் கே.இ.பிரகாஷ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஈரோடு மாநக ராட்சியில் தூய்மைப் பணியாளர் தொழிற் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள் ளது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி 1 ஆவது மண்டலம் வீரப்பன்சத்திரம் பகுதியில் சிஐடியு, தொமுச மற்றும் ஆதித் தமிழர்பே ரவை ஆகிய சங்கங்களின் சார்பில் தேர் தல் பரப்புரைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத் தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன் தலைமையில் தொமுச உள்ளாட்சி பொதுநலப் பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கிருஷ்ணன், ஆதி தமிழர் தூய்மை தொழிலாளர் சங்க செயலாளர் கே.மாரியப்பன் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பிரகாஷை வெற்றி பெறச்செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தொழிலாளர்களும் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். தங்க ளின் உற்றார், உறவினர், நண்பர்கள், அரு கில் குடியிருப்போர் அனைவரையும் வாக்க ளிக்கச் செய்வோம் என உறுதியளித்தனர்.