districts

img

உதகை மருத்துவமனையில் எலும்பியல் மருத்துவ மையம்

உதகை, ஜன.10- உதகை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில், எலும்பி யல் சிறப்பு மருத்துவ மையம் தொடங் கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பொதுமக்களின் நலன் கருதி எலும்பியல் சிறப்பு மருத்துவ மையம் தொடங்கப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ் சலி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், உதகை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஒரு வருட காலமாக முட நீக்கியல் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகளை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 70-க்கும் மேற்பட் டோருக்கு செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை, குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை சீராக்கும்  அறுவை சிகிச்சை, எலும்பு புற்று நோய் அறுவை சிகிச்சைகள் போன்ற சிகிச்சைகள் இந்த மருத் துவமனையில் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சிகிச்சைகள் தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு பல லட்சங்கள் செலவாகும். இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி இந்த சலுகைகள் அனைவருக்கும் எளிதாக சென்று சேரும் வகையில் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி னார். இந்த நிகழ்ச்சியில் மருத்து வக் கல்லூரி துணை முதல்வர் ஜெய லலிதா, மருத்துவமனை கண்கா ணிப்பாளர் பாலசுப்பிரமணியம், முடநீக்கியல் துறைத் தலைவர் அமர் நாத், டாக்டர் வினோத்  உள்பட பலர்  கலந்து கொண்டனர்.