districts

img

மூளைச்சாவு அடைந்த மனைவியின் உடல் உறுப்புகள் தானம்: கணவருக்கு மரியாதை

நாமக்கல், டிச.15- திருச்செங்கோட்டில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்த கணவருக்கு மரியாதை செய் யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகேயுள்ள கோவிந்தம்பா ளையத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட சாலை விபத்தில் அரசு பள்ளி ஆசி ரியை மஞ்சுளா மூளைச்சாவு அடைந் தார். இதனைத்தொடர்ந்து, அவரது  உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டது. இதன் காரணமாக ஆசிரியரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரி யாதையும் செலுத்தப்பட்டது. இந்நிலையில், மனைவி இறந்த துக்கத்திலும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த கணவர் ஈஸ்வ ரனுக்கு, திருச்செங்கோடு சின்ன ஓங் காளியம்மன் கோயில் பக்தர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அதில் மஞ்சுளாவின் கணவர் ஈஸ்வரனுக்கு பொன்னடை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்விற்கு, நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார். பரம்பரை அறங் காவலர் சாந்தி முத்துக்குமார், திமுக  சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.