திருப்பூர், ஜன.22- திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தபட்ட அதிகாரிக ளுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலம் வார்டு எண் 10 இல் ஆசர் மில் ரோடு மற்றும் வார்டு எண் 6இல், கலைமகள் பள்ளி வீதி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு வசதிகளான சாலை பணிகளை வெள்ளியன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், சாலைக ளின் தரம் குறித்து அலுவலர்களிடம் கேட்ட றிந்து சாலைகளின் தரத்தை நேரடியாக ஆய்வு செய்தார் தொடர்ந்து சாலை பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதேபோல சனியன்று திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை ஆணையா ளர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாநக ரில், பல்வேறு இடங்களில் முதற்கட்ட பரிசோ தனை மையங்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் படி, மூன்றாவது மண்டலம் வார்டு எண் 41இல், தாராபுரம் ரோடு அரசினர் தொழிற்ப யிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்டு, அந்த மையத்தின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், வார்டு 39 இல், ராக்கியாபாளை யம் பிரிவு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் தரத்தினை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். கடந்த இரு நாட்க ளாக சில பகுதிகளில் சாலை பணிகளை மாந கராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தாலும் நகரெங்கும் பல்வேறு குடியிருப்பு பகுதிக ளில் சாலைகள் சீரமைக்கபடாமல் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற தாக உள்ளன. எனவே உடனடியாக அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளை செப் பனிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்று மாநகர மக்கள் எதிர் பார்க்கின்றனர்.