பெரியார் படத்தை எடு, மோடி படத்தை வை பாஜக-வினர் மிரட்டல்: வழக்கு
ஈரோடு, டிச.16- ஈரோடு மாவட்டம், கோபியில், ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவகம் உள்ளது. இங்கு பதிவாளராக தமிழ்ச் செல்வி பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பத்திர பதிவு அலுவலகத்தினுள் அத்துத்மீறி நுழைந்த பாஜகவினர், தந்தை பெரியார் புகைப்படத்தை அகற்றி, மோடி படத்தை வைக்கு மாறு பதிவாளரிடம் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பதிவாளர் தமிழ்ச்செல்வி, கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கோபி நகர பாஜக தலைவர் முருகையன், பத்திர எழுத்தர் அரவிந்த் பாலாஜி, அவரது மனைவி புவனா, தாய் விஜயலட்சுமி என 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 448 (அத்துமீறி நுழைதல்), 353 (அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல்) ஆகிய 3 பிரிவு களில் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
ஆபாச படம் பார்க்கும் மாணவர்களை குறிவைத்து பணம் பறிப்பு - 4 பேர் கைது
கோவை, டிச.16- கரூர் மாவட்டம், தாந்தோணி மலையைச் சேர்ந்த மாண வர் ஒருவர் கைப்பேசிக்கு கடந்த டிச.13 ஆம் தேதி வந்த அழைப்பில், “தான் தாம்பரம் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுவதாகக்கூறிய, அடையாளம் தெரியாத நபர்கள், நீங்கள் ஆபாச படம் பார்ப்பதை கண்டுபிடித்துவிட்டோம்” எனக்கூறி, விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலும், விசா ரணை நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனால் பயந்து போன அந்த மாணவர் ரூ.5 ஆயிரத்தை இணையவழியில் அந்த அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து சந்தேகம டைந்த மாணவர், கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார ளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பணம் பறித்தவர் கோவையில் இருப்பது தெரியவந்தது. இதன்பிறகு கரூர் போலீசார் கோவை வந்தனர். வடவள்ளி காவல் துறையினரின் உதவியுடன் விசாரித்த தில் கல்லூரி மாணவருக்கு போன் செய்து மிரட்டி பணம் பறித்த வர்கள் வடவள்ளியை சேர்ந்த கவுதம் (19) என்பது தெரிய வந்தது. மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அதேபகுதி யைச் சோந்த மாதவன், ஜான்பீட்டர், சந்தன சொர்ணகுமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, கரூர் அழைத் துச் சென்றனர்.
வாக்கி டாக்கி சேதம்: காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
ஈரோடு, டிச.16- தகராறில் ஈடுபட்டு வாக்கி டாக்கியை சேதப்படுத்திய தலைமைக் காவலர்கள் இரு வரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் சுரேஷ் (43) பணியாற்றி வருகிறார். இவரது நண்பரான கல்யாணசுந்தரம், பவானிசாகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். இந்நிலையில், தலைமைக் காவ லர் சுரேஷ் கடந்த ஓராண்டுக்கு முன்பு நாமக் கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள் ளார். அதற்கு அவரது நண்பரான கல்யாண சுந்தரம் ஜாமீன் கையொப்பம் போட்டுள் ளார். இப்பணத்தை சுரேஷ் திருப்பித் தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதனால் கடன் கொடுத்த நபர் கல்யாணசுந்தரத்திடம் கேட்டுள்ளார். இதனிடையே சுரேஷ், கல்யா ணசுந்தரம் இருவரும் அண்மையில் குமார பாளையத்துக்கு சென்று கடன் கொடுத்த நப ரிடம் கால அவகாசம் கேட்க சென்றதாக கூறப் படுகிறது. அப்போது சுரேஷுக்கும், கல்யாணசுந்த ரத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள் ளது. இதில் சுரேஷின் வாக்கி டாக்கியை பறித்து கல்யாணசுந்தரம் தூக்கி எறிந்துள் ளார். இதில் வாக்கி டாக்கி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குமாரபாளை யம் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கல்யாண சுந்தரம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோச னைப்படி இருவரும் சமாதானமாக போவ தாக எழுதிக் கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தி தலைமைக் காவலர்கள் சுரேஷ் மற் றும் கல்யாணசுந்தரம் ஆகியோரை பணி யிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.