districts

தலித் சமூகம் குறித்து அதிமுக பிரமுகர் அவதூறு வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

உதகை, ஜூன் 9–  தலித் சமூகம் குறித்து அவதூறாக பேசிய அதிமுக பிரமுகரை வன்கொ டுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட ஓரசோலை பூபதி நகர் கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். பெரும்பாலானோர் தாழ்த்தப் பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்க ளாக இருக்கின்றனர். இந்நிலையில் கோத்தகிரியிலிருந்து குன்னூர் மற்றும் உதகைக்குச் செல்லும் பிரதான சாலை யில் இருந்து தாழ்வான பகுதியில் உள்ள பூபதியூர் கிராமத்திற்கு ஊராட்சி சார்பில் செங்குத்தான காங்கிரீட் நடை பாதை அமைக்கப்பட்டது. இத னால் அந்த சாலை வழியாக நடந்து செல்லவும், குறிப்பாக நோயாளிகள் மற்றும் இறந்தவர்களின் சடலங்களை சுமந்து கொண்டு செல்வதிலும் சிக் கல் ஏற்பட்டு வந்தது. எனவே, அருகா மையில் 59¼ சென்ட் இடம் உள்ள மற் றொரு பாதையை கிராம மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வரு கின்றனர்.  அந்த பாதை தனக்கு சொந்தமா னது என்று கூறி, அதிமுக பிரமுகரான வடிவேல் தடுப்புச்சுவர் கட்ட முயற்சி செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் பல கட்ட போராட் டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதற் கிடையே வடிவேல் தலித் மக்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதுகு றித்து பூபதி நகர் மக்கள் கோத்தகிரி காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் புகாரளித்தனர். ஆனால், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து பூபதி நகர் பொதுமக் கள் ஊர் தலைவர் மாகாளி தலைமை யில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் குறித்து அவதூறாக பேசிய வடிவேலு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி முருகன், வடிவேல் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய கோத்தகிரி காவல் ஆய் வாளருக்கு உத்தரவிட்டார். அதிமுக பிரமுகரான வடிவேலின் மனைவி கோத்தகிரி பேரூராட்சி கவுன்சிலராக இருப்பது குறிப்பிடத்தக்கது.