districts

மருத்துவ காப்பீட்டு சேவையில் குறைபாடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1.40 லட்சம் வழங்க உத்தரவு

சேலம், ஏப்.28- மருத்துவ காப்பீட்டு சேவையில்  குறைபாடு காரணமாக பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ரூ.1.40 லட்சம் வழங்க வேண்டும் என தனியார் நிறு வனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த கோவர்த் தனன் என்பவர், கடந்த 2020 செப்டம் பர் மாதம் சேலம் புதிய பேருந்து நிலை யம் அருகே உள்ள தனியார் ஹெல்த்  இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனக் கும், தனது மனைவி லாவண்யா, மகன் ஜீவரஸ்வர்த்தன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் சேர்த்து ஓராண்டு காலத்துக்கு ரூ.15 லட்சத் துக்கு மருத்துவ காப்பீடு எடுத்துள் ளார். இந்நிலையில், கடந்த 2021  ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவு கார ணமாக லாவண்யா சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை யில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அவரை உடனடியாக உள் நோயாளியாக சிகிச்சை பெறும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அந்த மருத்துவமனையில் படுக்கை வசதி  இல்லாததால், லாவண்யா உடனடி யாக கோவையில் உள்ள மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது, ஏற் பட்ட மருத்துவ செலவுகளுக்கான ரூ. 90,892யை செலுத்திவிட்டு வீடு திரும் பினார். இதன்பின் சிகிச்சை செலவுக் கான பணத்தை வழங்கும்படி கடந்த 2021 மே மாதம் சம்பந்தப்பட்ட காப் பீட்டு நிறுவனத்தில் அனைத்து ஆவ ணங்களையும் லாவண்யா சமர்ப் பித்துள்ளார். ஆனால், காப்பீட்டு நிறுவனத்தி னர் செவிசாய்க்காததுடன், லாவண்யா வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று இருக்கலாம் எனவும், மருத் துவமனை சென்று சிகிச்சை பெறும்  அளவுக்கு பாதிப்பு இல்லை என்றும்  கூறி, காப்பீட்டுத் தொகையை தர  மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட லாவண்யா, தமிழ்நாடு நுகர்வோர், மக்கள் உரி மைகள் புலனாய்வுக்குழு மூலம் சேலம் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந் தார். இதனை விசாரித்த சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணை யத் தலைவர் நீதிபதி கணேஷ்ராம், உறுப்பினர் ரவி ஆகியோர் தீர்ப்பு  வழங்கினர். அதில், புகார்தாரர் லாவண்யா, தனது கணவர் எடுத்தி ருந்த மருத்துவ காப்பீட்டு விதிமுறை களுக்குட்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற் றுள்ளார். மேலும், தனக்கு ஏற்பட்ட  மருத்துவ செலவுக்கான ரசீது, மருத் துவ ஆவணங்கள் உள்ளிட்ட  அனைத்தையும் மருத்துவமனை யில் இருந்து பெற்று, அதனை முறை யாக எதிர்தரப்பினருக்கு அனுப்பி, தனக்கு வரவேண்டிய மருத்துவ காப் பீட்டுத் தொகையைக் கேட்டுள்ளார்.  அதனை வழங்காமல் எதிர்தரப்பினர்  தவிர்த்தது சேவை குறைபாட்டைக் காட்டுகிறது. எனவே, எதிர்தரப்பினர் லாவண் யாவுக்கு கொரோனா மருத்துவ செல வுக்கான தொகை ரூ.90,892, சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை 2 மாத காலத்துக்குள் வழங்க வேண்டும். தவறினால் அத்தொகையைச் செலுத்தும் வரை 9 சதவிகித வட்டியு டன் சேர்த்து வழங்க வேண்டும் என  உத்தரவிட்டனர்.