மே.பாளையம், ஜன.6- மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத் தத்தில் உள்ள நாற்பது ஆண்டுகள் பழையான வணிக வளாக கடை களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டும் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள் ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் பேருந்து நிலையம் மற்றும் இதன் உட்புற வணிக வளாக கட்டி டங்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு கட்டப் பட்டது. நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக திகழும் மேட்டுப்பாளையம் பகுதி பேருந்து நிலையம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும், முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிலையமாக உள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பேருந்து நிலையத்தில் வாடகை அடிப்படையில் மொத்தம் 138 வணிக வளாக கடைகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டு கள் கடந்து விட்ட நிலையில், கட்டிடத் தின் பல பகுதிகளில் விரிசல் அடைந்தும் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் கடைகளின் சிமெண்ட் தளத்தில் ஏற்பட்டுள்ள விரி சல்கள் காரணமாக உள்ளே தண்ணீர் ஒழுகும் நிலை உள்ளது. மேட்டுப்பா ளையம் பேருந்து நிலையத்தை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டி புணரமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி யினரும், பொது நல அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த னர். அதன்படி, மேட்டுப்பாளையம் நகர் மன்ற கூட்டத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட் டது. இதனைடுத்து தமிழக அரசு, மேட் டுப்பாளையம் பேருந்து நிலைய வணிக வளாக பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டிடங்கள் கட்ட முதற்கட்ட நிதியாக ரூ. 8 கோடி ஒதுக்கி பணிகளை துவக்க உத்தரவிட்டது. இத னையடுத்து, பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் வணிக வளாக கடை களுக்கு சனியன்று மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப் பட்டது. அதில் பேருந்து நிலையம் புணர மைக்கப்படுவதால், 15 நாட்களுக்குள் வணிக வளாக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கடைகள் அனைத்தும் காலி செய்து நகராட்சி வசம் சாவிகளை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.