districts

மலைவாழ் மக்களுக்கு புதிய வீடுகள் கட்ட ஆணை பிறப்பிப்பு

கோபிசெட்டிபாளையம், அக்.5- அந்தியூர் அருகே வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு புதிய வீடு கள் கட்ட ஆணை பிறப்பித்த தமிழ் நாடு அரசிற்கு அப்பகுதி பொதுமக் கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வேத பாறை, கரும்பாறை மலை கிராம பகுதியில் 100க்கும் மேற்பட்ட பழங் குடியின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கு கடந்த 30  ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 40  தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப் பட்டன. தற்போது அந்த தொகுப்பு வீடுகள் சிதலமடைந்து, மழைக்காலங் களில் மழை நீர் கசிந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதனால் பழங்குடி யின மக்கள் அப்பகுதியில் குடிசை கள் அமைத்து வசித்து வந்தனர். வேத பாறை பழங்குடி மக்களின் தொகுப்பு வீடுகள் மட்டுமின்றி, அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர், தேவர்மலை, சோளகனை உள்ளிட்ட மலைகிராமங்களில் கடந்த 30 வருடங் களுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் சிதலமடைந்து காணப்படு கின்றன. எனவே, சிதலமடைந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்திடம் அப்பகுதி பழங் குடியின மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதனையேற்று பழங் குடியினர் நலத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைகிரா மத்தில் வசிக்கும் பழங்குடியின மக்க ளுக்கு 271 புதிய வீடுகள் கட்டுவ தற்கு நிதி ஒதுக்கீடு செய்து, தரைப் பகுதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் என  நிதி ஒதுக்கப்பட்டு ஆணை பிறப் பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அரசாணையில் புதிய வீடுகளுக் கான திட்டத்தில் பழங்குடியின மக் கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் வட் டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, பழங்குடி யின மக்களின் நீண்ட நாள்  கோரிக்கை நிறைவேற்றபட்டுள்ளதா கவும், தொடர்ந்து மலைவாழ் மக்க ளின் அனைத்து கோரிக்கைகளை யும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி நிறைவேற்றபடும் என சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் தெரி வித்தார். மேலும், சிதலமடைந்த வீடு களுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டு வதற்கான ஆணையை இன்னும் ஒரு சில தினங்களில் பயனாளிகளிடம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.  இதன்பின் வெங்கடாசலம் எம்எல்ஏ செய்தியாளரிடம் பேசுகை யில், முதல்வரின் அறிவுறுத்தலின் படி அந்தியூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட மலைவாழ் பழங்குடி மக்க ளின் கோரிக்கைகள் குறித்து கேட்ட றிய மலை கிராமங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளோம். இதில் மலை கிராம மக்கள் பட்டா இன்றி விவசாய நிலங்களில் நீண்ட காலமாக விவசாயம் செய்து வந்த வர்களுக்கு பட்டா வழங்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலை கிராம பகுதியில் புதிய அங்கன் வாடி மையம், வடிகால் வசதி, 24  மணிநேரமும் குடிநீர் வசதி, வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழையாமல் இருக்க அகழிகள் ஏற்ப டுத்தி மலைவாழ் மக்கள் பாதுகாப் பாக வாழ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம், என்றார்.