districts

img

தமிழ்நாடு அரசின் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு- சிஐடியு ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஏப்.15- தமிழ்நாடு அரசின் தொழிற் சாலைகள் சட்டத்திருத்த முன் வரவை கண்டித்து சிஐடியு சார்பில்  தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  சி.வி.கணேசன், “2023 ஆம் ஆண்டு  தொழிற்சாலைகள் சட்ட முன் வடிவை” அறிமுகம் செய்தார்.   ஒன்றிய அரசின் சட்டத் தொகுப்பு கள் அடிப்படையில் தமிழ் நாட்டில் தொழிற்சாலை முதலாளி கள் கோரிக்கைகள் அடிப்படை யில் இச்சட்டம் நிறைவேற்றப்பட் டுள்ளதாக, சட்டமன்றத்திலேயே மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோன்று, இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு தற்போது நிறை வேற்றியுள்ள புதிய சட்ட தொகுப்பு களில் செய்துள்ள மோசமான திருத் தங்களை அப்படியே ஏற்று பிரதி பலிப்பது தமிழக அரசிற்கு அழகல்ல. ஒன்றிய அரசின் திட்டங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. அதற் குள்ளாகவே தமிழ்நாடு அரசு தொழிலாளர்களுக்கு எதிராக, முத லாளிகளுக்கு ஆதரவாக அவசர அவசரமாக இச்சட்டத்தை நிறை வேற்ற துடிப்பதாக சிஐடியு குற்றஞ் சாட்டி உள்ளது.  இச்சட்ட திருத்தத்தின் காரண மாக வேலை நேரம், கூடுதல் வேலை  நேரம்,

கூடுதல் வேலை நேரத்திற் கான ஊதியம்,  கூடுதல் வேலைக் கான ஈடுகட்டும் விடு முறை, பணியின் போது விடவேண்டிய ஓய்வு நேரம்  போன்ற அடிப்படையான உரிமை கள் சம்மந்தப்பட்டவை. வேலை நேரத்தோடு தொடர்புள்ள  இந்த  ஷரத்துக்களில் இருந்து தொழிற் சாலை அல்லது  தொழிற்சாலை களின் குழு அல்லது குறிப்பிட்ட வகை  தொழிற்சாலைகளுக்கு விலக்களிக் கலாம் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இது முதலாளிகளின் கோரிக்கையை அப்படியே ஏற்றிருக் கிற மாநில அரசு தொழிற்சங்கங்க ளோடு எந்த ஆலோசனையும் செய்ய வில்லை. எந்த வகையிலும் ஏற்க இயலாத, தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்குகிற இந்த சட்டத்திருத்த முன்வடிவைக் கைவிடுமாறு சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் இந்த சட்டதிருத்த முன்வரைவுக்கு எதிராக சிஐடியுவின் அனைத்து கிளைகளும் கண்டனம் முழங்க வேண்டும் என அறைகூவல் விடுத் துள்ளது. இதன் ஒருபகுதியாக, தரும புரியில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு  மாவட்ட செயலாளர் பி.ஜீவா தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், சிஐடியு மாநில செயலாளர் சி.நாகராசன், மாநிலக்குழு உறுப் பினர் ஜி.நாகராஜன், மாவட்ட நிர்வா கிகள் சி.அங்கம்மாள் தி.லெனின் மகேந்திரன், கவிதா, லில்லிபுஷ்பம்,  ஆறுமுகம் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள், ஒன்றிய மோடி அரசின்  தொழிலாளர் விரோத நடவடிக்கை களை மாநில அரசும் அப்படியே பின்பற்றுவதாக குற்றம்சாட்டி முழக் கங்களை எழுப்பினர். இதில், திரளா னோர் பங்கேற்றனர்.