தாராபுரம், பிப்.16- தாராபுரம் அருகே பாக்கு தட்டு தயாரிப்பு தொழிற்சாலைக்கு அனு மதி வழங்கக்கூடாது எனக்கோரி கோட்டாச்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் வட்டம், வடுகபாளை யம் கிராமத்தில், பொதுமக்கள் குடி யிருப்பு பகுதியில் பள்ளபட்டி பகு தியை சேர்ந்த தனியார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க கட்டிட பணிகளை மேற்கொண்டு வருகி றது. இதுகுறித்து பொதுமக்கள் விசாரிக்கையில், இந்த இடத்தில் கேரளாவிலிருந்து பாக்கு மர இலை களை கொண்டு வந்து பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுவது தெரியவந்தது. அதேநேரம், இந்த தொழிற்சாலை அமைக்கப்படும் பட்சத்தில் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், குடிநீர் கிணறுகள் பாதிக் கப்படும். ஆகவே, இங்கு தொழிற் சாலை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி கடந்த மாதம் 21 ஆம் தேதி கிராம மக்கள் திரண்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால், இந்த மனு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் செவ்வா யன்று கோட்டாட்சியரை கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கிராம மக்களை சமாதானப்படுத்திய கோட்டாட்சி யர் குமரேசன், இப்பிரச்சனை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.