சேலம், ஏப்.9- இந்தியை திணிக்கும் வகை யில் ஒன்றிய உள்துறை அமைச்சர் பேசி வருவதற்கு மாநில சிறு பான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சேலம் சூரமங்கலத்தில் அனைத்து கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமி ழக சிறுபான்மையினர் ஆணை யத்தின் தலைவர் பீட்டர் அல் போன்ஸ் கலந்து கொண்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத் திற்கு பதிலாக இந்தி மொழியைத் திணிக்கும் நோக்கில் பேசி வரு கிறார். இது இந்தி பேசாத, மற்ற மாநில மக்களை கடுமையாக பாதிக் கும். அம்மாநிலத்தவர்களை இரண் டாம் தர குடிமக்களாக்கும் நிலையை உருவாக்கும். மேலும், அரசு கல்வி நிறுவனங்க ளில் இருந்து மாணவர்களை வெளியே தள்ளுவதற்கான முயற்சி தான் இது. இந்தி படித்தால் மட்டும் தான் மத்திய அரசு பணியில் நுழைய முடியும் என்ற நிலைப்பாட்டை காட்டுகிறது. ஆங்கிலக் கல்வி படித்து தான், உலகம் முழுவதும் சென்று இந்திய மாணவர்கள் முக்கிய பொறுப்புகளில் பணி யாற்றி வருகிறார்கள். இதுபோன்ற கல்வி மாணவர்களுக்கு கிடைக்கக் கூடாது என ஒன்றிய அரசு நினைக்கி றதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆங்கில அறிவு இல்லாமல் இந் தியை மட்டும் வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல முடியாது. எனவே இந்தியை திணிக்க கூடாது என்றார்.