அவிநாசி, மார்ச் 6- அவிநாசி அருகே தத்தனூர் பகுதியில் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரி வித்து, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கான பணி கடந்த 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதை யறிந்த அப்பகுதி பொதுமக்கள் தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் உள் ளிட்ட ஊராட்சி பகுதிகளில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டால், விளை நிலங்கள், கால் நடை வளர்ப்பு, பால் உற்பத்தி ஆகியவை பாதிப்புக்குள்ளாகும் எனக் கூறி மறியல், தர்ணா உள்ளிட்ட தொடர் போராட்டங்க ளில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்போ தைய அரசு, பொதுமக்களுக்கு எதிராக தொழில் பூங்கா அமைக்காது என உறுதிய ளித்து, தொழில் பூங்கா திட்டத்தை கைவிட் டது. இந்நிலையில், தத்தனூர் பகுதியில் மீண்டும் தொழில் பூங்கா அமைப்பதற்காக அலுவலர்கள் ட்ரோன் கேமரா மூலம் அளவீடு பணி மேற்கொண்டனர். இதை யறிந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அளவீடு பணி மேற் கொள்ள வந்த அலுவலர்கள், உயர் அலுவலர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். இதில், உயர் அலுவலர்கள், தத்தனூர் ஏற்கனவே தொழில் பூங்கா அமைக்கும் பணி கைவிடப் பட்ட பகுதி எனத் தெரிவித்ததாகவும், பழைய பட்டியல்படி அளவீடு மேற்கொள்ள வந்து விட்டதாகவும் கூறி, அளவீடு பணி களை நிறுத்தி அலுவலர்கள் திரும்பி சென்ற னர். மேலும், இதுகுறித்து, திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்புராயன், திருப்பூர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ். கிருஷ்ணணுண்ணி, வருவாய் கோட்டாட்சி யர் அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் தனபால் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பினர். இந்நிலையில், தத்தனூர் சுற்று வட்டார கிராம மக்கள் ஒன்று கூடி இது சம் பந்தமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.