சேலம், மார்ச் 9- இடங்கணசாலை நகராட்சிக் குட்பட்ட ஏரியில் கழிவுநீர் சுத்திக ரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தங்க ளது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், இடங்கண சாலை நகராட்சி, 9 ஆவது வார்டுக் குட்பட்ட சின்ன ஏரியில் ரூ.8 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில், கழி வுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அடிக் கல் நடப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், அர சியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்தும், பல போராட்டங்க ளில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், 100க்கும் மேற்பட்ட காவ லர்கள் குவிக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள் துவங் கப்பட்டுள்ளன. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் 500க் கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டியும், எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகளை ஒட் டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். நிலத்தடி நீர் மாசுபடும் இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், சின்ன ஏரி பகுதியில் இடங்கணசாலை நக ராட்சி பகுதியில் உள்ள 27 வார்டு களில் சேகரிக்கப்படும் குப்பை களை கொட்டி தரம் பிரிக்கும் குப்பை கிடங்கு செயல்பட்டு வருகி றது. அதுமட்டுமில்லாமல் தற்பொ ழுது இவ்விடத்தில் நவீன மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விடத்தில் உரம் தயா ரிப்பு நிலையமும் செயல்பட்டு வரு கிறது. இந்நிலையில், இதேபகு தியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க முயற்சி நடைபெற்று வரு கிறது. ஏற்கனவே நிலத்தடி நீர் மாச டைந்து உள்ளது. சுத்திகரிப்பு நிலை யம் அமைத்தால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரி டும். நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை இல்லாத பகுதிக்கு எதற் காக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர். பொய் வழக்கு இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சங்ககிரி தாலுகாக் குழு உறுப்பினர் சீனிவாசன் கூறு கையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு ஆரம்ப கட்டத்தில் இருந்து பொது மக்களிடம் கடும் எதிர்ப்பு நிலவி வரு கிறது. இத்திட்டம் குறித்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்தும், முடிவு எட்டப்படாத நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி காவல் துறையினர் குவிக்கப்பட்டு பணிகளை செய்து வருகின்றனர். இத்திட்டத்தை மாற்று இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டுள்ளது. இதற்காக எனது மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வழக்குகள் அனைத்தும் ரத்து செய்ய வேண் டும். மேலும், இத்திட்டத்தை மாற்று இடத்திற்கு இடமாற்றம் செய்ய நட வடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டம் நடைபெறும், என் றார்.