கோவை, செப்.7- தமிழகத்தில் உயர்த்தப் பட்ட பீக் ஹவர் கட்டணம், நிலை கட்டணம் ஆகிய வற்றை ரத்து செய்ய வலி யுறுத்தி கோவையில், மூன்று மாவட்டங்களை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளை சேர்ந்த வர்கள் அடையாள உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட் டனர். தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதில் தொழில் துறை யினருக்கு நிலைகட்டணம் மற்றும் பீக்ஹவர் கட்டணங்களை அதிகரித்தது. இதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தொழில் முனைவோர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக் கினர். இந்த அமைப்பின் சார்பில் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் வியாழ னன்று அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த ஏராளமான தொழில் முனைவோர் பங்கேற்றனர்.