நாமக்கல், ஜன.17- பள்ளிபாளையம் நகராட்சியுடன் எலந்த குட்டை ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, எலந்தக்குட்டை ஊராட்சியில் 33 குக் கிராமங்கள் உள்ளன. 100 நாள் வேலை திட் டத்தில் 1700 பேர் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளிபாளையம் நகராட்சியு டன் எலந்தகுட்டை ஊராட்சியை இணைக்கப் படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட் டுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்படும் பட் சத்தில், 42 வகையான ஊராட்சி சலுகைகள் பறிபோகும். வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி பல மடங்கு அதிகரிக்கும். எனவே, தமிழக அரசின் இந்த முடிவை கைவிட வேண்டும், என வலியுறுத்தி பொதுமக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அரசி யல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக, வெள்ளியன்று வெப்படை நான்கு ரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலை மையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட னர். இப்போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தனேந்திரன் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளரும், படைவீடு பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவருமான பி.பெரு மாள், எலந்தக்குட்டை ஊராட்சி மன்ற முன் னாள் தலைவர் வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்திரமதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், முன் னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கும் முடிவு குறித்து, தமிழக அரசு அந்தந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்களின் முழு கருத்தை கேட்ட பிறகு முடிவெடுக்க வேண்டும், என போராட்டக்காரர்கள் தெரி வித்தனர். முடிவில், அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்ட பத்தில் அடைத்தனர்.