அவிநாசி, மார்ச்.21- திருமுருகன்பூண்டி நகராட்சி நீர்வழிப் பாதையில் கட்டிடம் கட்டுவதற்கு, இயற்கை ஆர்வ லர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமுருகன்பூண்டி நகராட்சி உட்பட்ட10 ஆவது வார்டு பகுதியில், நீர்வழி பாதையில் திடக்க ழிவு மையம் அமைந்துள்ளது. இதனை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதில் சில காரணங்களை சுட்டிக் காண்பித்து நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் வண்டிப்பாதையில், பழமை வாய்ந்த மரங்களை வெட்டி சாய்க்கப்பட்டு, கட்டி டம் கட்டுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தக் கட்டிடம் கட்டுவதிள் காரணமாக வண்டிப்பாதை ஆக்கிரமிக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல அருகில் நல்லாறு இருக்கிறது. இதில் வண்டி பாதை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சிய ருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.