districts

img

நகர மன்ற அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு - சிபிஎம் கவுன்சிலர்கள் முற்றுகை

அவிநாசி, ஏப்.21- திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளரை வியாழனன்று சிபிஎம் கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு வாக் குவாதத்தில் ஈடுபட்டனர். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றவுடன் திருமுருகன்பூண்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. திருமுருகன்பூண்டி நகரமன்ற அலு வலகம் பேருந்து நிறுத்தம் அருகாமை யில் செயல்பட்டு வருகிறது. இந்நிலை யில், திருமுருகன்பூண்டி நகரமன்றத் தலை வர் உத்தரவின் பேரில், நகர மன்ற அலுவல கத்தை ராக்கியாபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை இருக்கும் இடத்தில் மாற்றுவ தற்காக மண் மாதிரி எடுத்து பரிசோத னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நகர மன்ற கவுன்சிலர்கள் சுப்பிர மணியம், தேவராஜன், பார்வதி மற்றும் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிட் டோர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  நகரமன்றத் தலைவர் மற்றும் ஆணையா ளரை நீண்ட நேரமாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நகர மன்ற கூட்டத்தில், அலுவலக மாற்றம் குறித்து விவாதிக்காமல் எப்படி இடத்தை  தேர்வு செய்தீர்கள் என வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, இடம் தேர்வு குறித்து நகரமன்ற கூட்டத்தில் பேசி  முடிவெடுக்கப்படும் என நகர்மன்ற தலை வர் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.