districts

உப்பாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தாராபுரம், பிப்.27- தாராபுரம் அருகே உள்ள உப்பாறு  அணையில் இருந்து பாசனத்திற்காக தமிழக அமைச்சர்கள் ஞாயிறன்று தண்ணீரை திறந்து வைத்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையில்  இருந்து பாசன நிலங்கள் பயன்பெறும்  வகையில், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி உப்பாறு அணை யிலிருந்து வலது மற்றும் இடதுகரை கால்வாய்களிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டனர். இதன்மூலம் 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி, கண்காணிப்பு பொறியா ளர் தேவராஜ் ஆகியோர் கலந்து  கொண்டனர். திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.