districts

img

சின்னாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தருமபுரி, டிச.30- சின்னாறு அணையிலிருந்து 2021-22 ஆம் ஆண்டு பாசனத்திற்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட் டம், பஞ்சப்பள்ளி கிராமம், சின்னாறு நீர்த் தேக்கத்திலிருந்து 2021-22 ஆம் ஆண்டு பாச னத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல் வம் பங்கேற்று பேசுகையில், சின்னாறு அணைதிறப்பின் மூலம் பழைய ஆயக்கட்டு பரப்பு 2 ஆயிரத்து 626 ஏக்கர் மற்றும் புதிய  ஆயக்கட்டு பரப்பு ஆயிரத்து 874 ஏக்கர் என மொத்தம் 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்ட அள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலான், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்கள் பாசன‌ வசதி பெறும் என்றார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், தருமபுரி நாடாளுமன்ற உறுப் பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், கூடு தல் ஆட்சியர்  ரா.வைத்திநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பி.சுப்பிர மணி, பி.என்.பி. இன்பசேகரன், வேளாண் துறை இணை இயக்குநர் வசந்தரேகா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.