சேலம், நவ.18- காடையாம்பட்டி அருகே தீவட்டிபட்டியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் திறந்து வைத்தார். சேலம் காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தமானது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதால் தினமும் தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாள்தோரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணி கள் பெங்களூருக்கும், சேலத்திற்கும் சென்று வருகின்ற னர். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் மழை காலத் தில் நனைந்து கொண்டும், வெயில் காலங்களில் வெய்யில் நின்றபடியே பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதை யடுத்து பயணிகளின் சிரமத்தை போக்க தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சேலம் நாடாளுமன்ற உறுப்பி னர் நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. கட்டிடப்பணிகள் முடிவடைந்த நிலையில், அந்த நிழற்கூடத்தை சேலம் நாடாளுமன்ற உறுப்பி னர் எஸ்.ஆர்.பார்த்திபன் பொதுமக்களுக்கு பயன்பாட் டுக்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு, திமுக ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி செயலா ளர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.