districts

img

முள்ளுவாடி ரயில்வே கேட் மேம்பாலம் திறப்பு

சேலம், ஜன.19- சேலம், முள்ளுவாடி ரயில்வே கேட் மேம் பாலத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச் சர் கே.என்.நேரு, வெள்ளியன்று பொதுமக் கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். சேலம், முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதி யில் ரூ.129.20 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதனை வெள்ளியன்று நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதன்பின் அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம், அஸ்தம்பட்டி  செரி சாலையில் சேலம் சந்தை மற்றும்  சேலம் நகரம் ரயில்வே நிலையங்களுக் கிடையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. மேலும், சேலத்திற்கு நக ராட்சி நிர்வாகத்துறை சார்பில் சட்டமன்றத் தில் அறிவிக்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்பி லான மேம்பாலப் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் பொன்னமாபேட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக, மேம்பாலம் அருகில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திரு வுருவச்சிலைக்கு அமைச்சர் மாலை அணி வித்து, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சி யில், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், சட்ட மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், காவல் ஆணையர் விஜயகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.