districts

img

சிவில் இன்ஜினியர் சங்க அலுவலகத்தில் நூலகம் திறப்பு

திருப்பூர், மார்ச் 30 - திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் அலுவல கத்தில் பொறியாளர்கள் நூலகம் திறப்பு விழா புதனன்று நடை பெற்றது.  இந்த விழாவிற்கு சங்கத் தலைவர் சௌ.ஸ்டாலில் பாரதி தலைமை ஏற்றார். செயலாளர் கே.ராதாகிருஷ்ணன் வர வேற்றார். உடனடி முன்னாள் தலைவர் பி.கே.முரளி முன்னி லையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரி யப்பனவர் பொறியாளர்கள் நூலகத்தை திறந்து வைத்து  சிறப்புரையாற்றினார். இந்நூலகத்தில் பொறியாளர்களுக்கு உரிய பல்வேறு நூல்கள் இடம் பெற்றுள்ளன. சென்னை  கார்த்திகேயன் அசோசியேட்ஸ் பொறியாளர் ஏ.கார்த்திகே யன் நூலகத்தின் அவசியம் குறித்து கருத்துரையாற்றினார். துணைச்செயலாளர் ஆர்.பிரகாஷ் முன்னாள் தலைவர்கள்  எஸ்.பொன்னுசாமி, கே.ஏ.எஸ்.ரமேஷ்குமார், வி.மணிகண் டன் உட்பட பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பொரு ளாளர் என்.பாரதிராஜா நன்றி கூறினார்.