சேலம், ஜன.19- சேலம் மாவட்டத்தில் ரூ.6.70 கோடி மதிப்பீட் டில் கட்டப்பட்ட செவித்திறன் குறையுடையோருக் கான உயர்நிலைப்பள்ளியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத் தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்ப டுத்தி வருகிறார். குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை 75,058 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றியோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், கடும் உடல் இயக்க குறைபாடுடையோர், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என 12,789 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. தன் னைத்தானே பராமரித்துக் கொள்ள இயலாத மாற் றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,498 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 2023 - 2024 ஆம் நிதியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் 897 மாற்றுத்திற னாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.48.76 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. சேலம் செவ்வாய்பேட்டையில் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 53 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளிகள் தொண்டு நிறுவனங்கள் மூலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் அரசு செவித்திறன் குறையுடையோ ருக்கான உயர்நிலைப்பள்ளி கொண்டப்பநாயக் கன்பட்டி கிராமத்தில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் 100 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயிலும் அள வில் பள்ளி கட்டடம் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலி ருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். இப் புதிய கட்டடத்தில் 45 மாணவ மாணவிகளுக்கு 8 சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மே கம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பி னர் இரா.அருள், சேலம் ஒன்றியக்குழுத் தலைவர் மலர்க்கொடி ராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் ரா.மகிழ்நன் மற்றும் மாற்றுத்திற னாளி மாணவர்களின் சிறப்பு ஆசிரியர்கள், மாற் றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.