கோவை, நவ. 4- தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் நவம்பர் 7 முதல் வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபடவுள்ளதாக ஓஸ்மா அறிவித் துள்ளது. கழிவுபஞ்சு விலை ஏற்றம் மற்றும் குறைந்த நூல் விலை போன்ற காரணங் களால் ஓஇ மில்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஆட்சி யாளர்களை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓபன் எண்ட் ஸ்பினிங் மில்கள் வரும் நவம்பர் 7ம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை உற்ப த்தியை நிறுத்தப் போவதாக அறிவித் துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசு உயர்த்திய மின் கட்டணத்தை உடன டியாக குறைத்து பழைய மின் கட்ட ணத்தை அமல்படுத்த வேண்டும். காட்டன் வேஸ்ட் மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு கழிவு பஞ்சு ஏற்றுமதியை உடனடி யாக தடை செய்ய வேண்டும். மகாராஷ் டிரா, குஜராத், ஹரியானா, பீகார், பஞ் சாப் மாநிலங்களில் 50% மானியம் வழங்கி வருவது போல் தமிழக அரசும் உற்பத்தி இருக்கும் ஜவுளி நிறுவனங்க ளுக்கு சலுகைகள் வழங்கி புதிய ஜவுளி கொள்கையை அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து உற்பத்தி நிறுத்தம் செய்யப் போவ தாக அறிவித்துள்ளனர்.