சிஐடியு ஆர்ப்பாட்டம் திருப்பூர், ஜூலை 28– மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் படி ஆன்லைன் அபராதம் என்னும் அநியா யமாக பணம் பறிப்பதை முறைப்படுத்த வலி யுறுத்தி சிஐடியு மோட்டார், ஆட்டோ தொழிற் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். ஆன்லைன் அபராத வசூல் என்று காவல் துறை அபரிமிதமாக பணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண் டும். உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் நம் நாட்டில் டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்படாமல் உள்ளது. உடனடி யாக விலையைக் குறைக்க வேண்டும். ஆர்டிஓ அலுவலகங்களில் தேவையான ஊழி யர்களை நியமித்தி தாமதத்தைப் போக்க வேண்டும். ஆர்டிஓ அலுவலகத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் கழிப்பறையை சுகா தாரக் கேட்டில் இருந்து தூய்மைப்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல் லைக்குள்ளும் சொந்த பயன்பாட்டு வாக னங்களை வாடகை வாகனமாக பயன் படுத்துவதை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மோட்டார் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.விஸ்வநாதன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, பொருளாளர் சி.அருண், கட்டுமானத் தொழி லாளர் சம்மேளன மாநிலப் பொதுச் செய லாளர் டி.குமார் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர்.