districts

img

எல்ஆர்ஜி கல்லூரியில் மாணவிகள் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

திருப்பூர், ஆக. 28 - திருப்பூர் எல்ஆர்ஜி அரசு  மகளிர் கலைக் கல்லூரியில்  அத்தப்பூ கோலமிட்டு நடன மாடி ஓணம் பண்டிகை கொண் டாடி மகிழ்ந்தனர். கேரள மக்களி்ன் பாரம்ப ரிய பண்டிகையான ஓணம்  பண்டிகை செவ்வாயன்று கொண்டாடப்படுகிறது.  கேரள மாநிலத்தை சேர்ந்த வர்கள் கோவை திருப்பூர்  மாவட்டங்களில் அதிக அள வில் வசித்து வருவதால் எங்கும் ஓணம் பண் டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  குறிப்பாக வெளி மாநிலங்களை சேர்ந்த வர்கள் அதிகளவில் வசிக்கும் திருப்பூரி லும் ஒணம் பண்டிகை கொண்டாட்டம் சிறப் பாக நடந்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக திருப்பூர்  பல்லடம்  சாலை எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்  கல்லூரியில் மாணவிகள் திங்களன்று ஒணம்  பண்டிகை சிறப்பாக கொண்டாடினர். மாண விகள் ஓணம் பண்டிகைக்கான புடவை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.  மேலும் குழுவாக நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓணம் பண் டிகைக்காக திருப்பூரில் செவ்வாயன்று உள் ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலை யில் திங்களன்று இந்த கொண்டாட்டம் நடை பெற்றது.