இந்தியாவில் இடதுசாரி இயக்கம் ஊசலாட்டம் இல்லாமல் நிலைநிற்கும் மாநிலம் என்ற நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தாக்குதல்களை முறியடித்து எல்.டி.எஃப் அரசு மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொன்னான வேளையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டிற்கு முன்னோடியாக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள மூன்று முக்கியமான மாநாடுகளுக்கு களமாக இருந்துள்ள கொச்சி நகரம் மீண்டுமொரு மாபெரும் மாநாட்டை நடத்துவதற்கு தயாராகி நிற்கிறது என்பதுதான் மற்றுமொரு சிறப்பாகும். இந்த மாநாட்டின் அரசியல், ஸ்தாபன முக்கியத்துவத்தை அறிந்துள்ள மாவட்டத்தின் கட்சி அமைப்புகளும் பொதுமக்களும் மாநில மாநாட்டின் வெற்றிக்காக முழுவீச்சில் ஈடுபட்டிருந்த காட்சியை நாம் காண முடிந்தது.
நவரத்தின மதிப்புள்ள HPCL நிறுவனத்தின் விற்பனை, எல்ஐசி போன்ற மாபெரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை ஆகிய பணிகள் அதிக உற்சாகத்துடன் நடைபெறுகின்றன. பாஜக அரசு அதிகாரத்திற்கு வந்தபிறகு கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த கடைசி நடவடிக்கைமட்டும்தான் இது. நிதி ஆதாரத்தைப் பெருக்குகிறோம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களைத் தாரைவார்ப்பதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை தினந்தோறும் மத்திய அரசு எடுத்தவண்ணம் உள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் சிறியதும் பெரியதுமான மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் பெருகிவரும் காலமுமாகும் இது. நாட்டின் தலைநகரில் ஒரு வருடமாகத் தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் வரலாற்று வெற்றியானது மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களுக்கு பெரிய அளவில் உத்வேகம் அளித்துள்ளது. இன்றைய சூழலில் மத்தியிலுள்ள பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவேண்டியது நாட்டின் மிக அவசியத் தேவையாகும்.
முன்மாதிரி நடவடிக்கைகள்
மாநில வரலாற்றில் முதல் முறையாக எல்டிஎஃப் அரசு தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்துள்ளது ஒரு வரலாற்று நிகழ்வாகும். பினராயி விஜயன் தலைமையிலான முதல் எல்டிஎஃப் அரசு மக்களின் நலன் சார்ந்த பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் வெற்றியாக அது அமைந்தது. பினராயி விஜயன் தலைமையிலான தற்போதைய இரண்டாவது அரசும் தொடர்ந்து மக்கள் நலனில் கவனம் செலுத்தி முன்னோக்கிச் செல்கிறது. கோவிட் முதலான நெருக்கடிகளை உலகிற்கே முன்மாதிரியான முறையில் எதிர்கொள்வதற்கு இடதுசாரி அரசால் முடிந்தது.
நமது அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பை உயர்த்திப் பிடித்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளத்தில் அமல்படுத்தமாட்டோம் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு இந்தியாவிலுள்ள ஜனநாயகவாதிகள் அனைவரது பாராட்டையும் பெற்றது. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனைக்கு வைத்தபோது ஹெச்பிஸியை மாநில அரசு தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டது முன்மாதிரியாக அமைந்தது. நாட்டின் வளர்ச்சிப் பட்டியலில் மாநிலம் முதலிடம் பிடித்தது. இத்தகைய சூழல்களுக்கிடையிலும் எல்டிஎஃப் அரசுக்கு எதிராக ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கட்டவிழ்த்து விடுவது தொடர்கிறது. ஆனால் அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் மதிப்பளிக்காமல் ஒரு புதிய கேரளத்தை உருவாக்குவதற்கான செயல் திட்டங்களை நிறைவேற்றுவதில் பினராயி அரசு முழுக்கவனம் செலுத்தி முன்னேறிச் செல்கிறது. இது காலத்தின் கட்டாயமாகும்.
37 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில மாநாடு எர்ணாகுளத்தில் நடைபெறுகிறது. பனிரண்டாவது அகில இந்திய மாநாட்டின் முன்னோடியாக 1985ல் கொச்சியில் மாநாடு நடைபெற்றது. மதவாத சக்திகளுடன் எந்தவிதத்திலும் அரசியல் உறவு கூடாது என்ற உறுதியான நிலைப்பாடு எடுத்த மாநாடாக அது இருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் எம்.வி.ராகவனும் அவரது கூட்டாளிகளும் கட்சியிலிருந்து வெளியேறினார்கள். சிபிஐ(எம்) வீழ்ந்தது என்று காங்கிரஸ் கட்சியும் ஊடகங்களும் பெரும் உற்சாகத்தில் கூச்சலிட்டன. ஆனால் அந்த மாநாட்டிற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மதவாதம் தொட்டுத் தீண்டாத இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது என்பது வரலாறு.
சிபிஐ(எம்) உருவானதில் முக்கியப் பங்குவகித்த, மிக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமும் எட்டாவது அகில இந்திய மாநாடும் இதற்கு முன்பு கொச்சியில் நடைபெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகு 1964 ஜூலை 7 முதல் 11 வரை ஆந்திர மாநிலம் தெனாலியில் நடந்த சிறப்பு மாநாட்டிற்கு (கன்வென்ஷன்) முன்னோடியாக கொச்சியில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. 1964 ஜூன் 12,13 ஆகிய தேதிகளில் கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இடதுசாரி தலைமையிலுள்ளவர்கள் அனைவரும் கொச்சியில் ஒன்று கூடினார்கள். கேரளத்தில் சிபிஐ(எம்) உருவாவதற்கு தலைமையேற்றது இந்த ஸ்தாபனக் கமிட்டிதான். இந்தச் சிறப்பு மாநாட்டுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து கொச்சியில் எட்டாவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது.
1968 ஆம் ஆண்டு மாநில கட்சி பிளீனம் கொச்சியில் நடைபெற்றது. ஜனவரி 2 முதல் 7 வரையிலும் பிளீனம் நடைபெற்றது. நக்சலிசம் நுழைந்ததைத் தொடர்ந்து கேரளத்தில் நிலவிய சூழலைக் கணக்கில் கொண்டு கட்சியின் மாநிலக்குழு கேட்டுக் கொண்டதற்கிணங்க மத்தியக்குழு பிளீனத்திற்கு அனுமதி வழங்கியது. பிளீனத்தை கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் பி.சுந்தரய்யா துவக்கிவைத்தார். அக்காலத்தின் அரசியல் நிலைமைகள் மற்றும் தத்துவார்த்த ரீதியிலான பிரச்சனைகள் குறித்து சுந்தரய்யா தனது உரையில் விளக்கினார். மாவோவின் சிந்தனையில் உள்ள குறைபாடுகளைக் குறித்து சுந்தரய்யா கீழ்க்கண்டவாறு விளக்கினார். ’’ மாவோவின் சிந்தனைகள் இன்றைய காலகட்டத்தில் மார்க்சிசம்-லெனினிசம் போன்றதாகும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நமது கட்சி, அந்த நிலையில் அதை அங்கீகரிக்கவில்லை. நமது கட்சி அந்த அனுபவங்களையும் கருத்துக்களையும் உட்கொள்வதற்கு விரும்புகிறது. அந்த வெளிச்சத்தில் இந்தியச் சூழலில் என்ன செய்யவேண்டும் என்பதை நாம் முடிவு செய்வோம். அந்த சிந்தனைகளும் கருத்துக்களும் எப்போதும் எல்லா இடங்களிலும் சரியானது என்று கூறுவது மாவோவின் கருத்துக்களுக்கே கூடப் பொருந்தாததாகும்’’.
தத்துவார்த்தத் தீர்மானங்கள் குறித்த திருத்தங்கள், ஸ்தாபன வேலை அறிக்கை ஆகியவை கொச்சியில் நடைபெற்ற பிளீனத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. வர்க்க-வெகுஜன ஸ்தாபனங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து அதிலுள்ள குறைபாடுகளை போக்குவதற்கான தலையீடுகளும் முன்வைக்கப்பட்டது. கட்சிக் கல்வி செயல்பாடுகள், இளைஞர் இயக்கங்கள் ஆகியவற்றை வலுப்படுத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
முப்பத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநில மாநாட்டை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ள இந்த வேளையில் அரை நூற்றாண்டுக்கு முன்பு சரித்திரப் புகழ்பெற்ற அகில இந்திய மாநாட்டை (கட்சி காங்கிரஸ்) நடத்தியதன் நினைவுகள் துறைமுக நகரத்திற்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான 1964 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாடுதான் கட்சியின் திருத்தப்பட்ட அரசியல் நகல் தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.
பேரணிக்கு முதல் நாளே பொதுக்கூட்டம் நடைபெற்ற வியட்நாம் நகரை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர். மாலை 6 மணிக்கு துவங்கிய பேரணி இரவு 11 மணிக்கு மேலும் நீடித்தது. எர்ணாகுளம் கச்சேரிப்படி வரையிலான சாலை முழுவதும் மக்களால் நிரம்பி வழிந்தது. தோழர் ஏ.பீட்டரின் தலைமையிலான செந்தொண்டர் பேரணிக்குப் பின்னால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் பயணித்த பி.சுந்தரய்யா, இ.எம்.எஸ், ஏ.கே.ஜி, ஜோதிபாசு, பிரமோத் தாஸ் குப்தா, பசவ புன்னையா ஆகியோர் பேரணி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள்.
பனிரண்டாவது அகில இந்திய மாநாட்டிற்கு முன்னோடியாக 1985 ஆம் ஆண்டு நவம்பர் 20 முதல் 24 வரை எர்ணாகுளத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டிற்குப் பிறகு தற்போது மாநில மாநாடு கொச்சியில் நடைபெறுகிறது.
2022 மார்ச் 1 முதல் 4 வரை எர்ணாகுளத்தில் நடைபெறும் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டம் முழு வதும் நடைபெற்றுள்ளது. அது மாவட்டத்தில் கட்சியின் வலிமை யையும் செயல்திறனையும் பறைசாற்றுவதாக அமைந்தது. மாநில மாநாட்டின் முன்னோடியாக சிபிஐ(எம்)ன் தலைமையில் 150 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. கருணைத் திட்டத்தின் ஒரு பகுதியாக15 டயாலிசிஸ் யூனிட்டுகளும்
செயல்படத் துவங்கியது பொருளாதாரமில்லாத நோயாளிகளுக்கு ஆறுதலாக அமைந்தது. நகரத்தில் 2.75 கோடி ரூபாய் செலவில் தியாகி அபிமன்யூ நினைவு மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டதும் பெருமைமிகு வெற்றியாகும்.
மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக மாவட்டத்தில் கட்சி ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உற்சாகத்தில் எளிமையும் அர்த்தம் நிறைந்ததுமான முன்மாதிரியான பிரச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மாவட்டத்தில் 3030 கிளை மையங்களில் மக்களைக் கவரும் விதமான வரவேற்புக்குழு அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. எர்ணாகுளம் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கு தலைமையேற்ற 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களின் நினைவைப் போற்றும் வகையில் கிளைகள் மட்டத்தில் ஸ்தூபிகள் வடிவமைத்திருந்தது உணர்ச்சிமயமான அனுபவமாக இருந்தது.
தியாகிகளின் நினைவுக் குடில்கள், வளைவுகள், நினைவு மண்டபங்கள், கொடி தோரணங்கள் ஆகிய அலங்கார வேலைப்பாடுகள் மாநாட்டின் எழுச்சியை மாவட்டத்தின் கிராமப்புறங்களும் நகரமும் நெஞ்சிலேற்றுகின்ற காட்சியைக் காண முடிந்தது. அதிகமான கம்யூனிஸ்ட் ரத்த சாட்சிகளின் தன்னலமற்ற தியாகத்தின் நினைவுகள் நிறைந்த கூத்தாட்டுகுளம் பகுதியில் ரத்தச் சாட்சிகளின் தேசம் என்ற புத்தக வாசிப்பு இயக்கம் கிளை மட்டங்களில் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக கோலஞ்சேரி, திருவாணியூரில் கே.வி.பேபி என்ற தோழர் நிலமற்ற நான்கு குடும்பங்களுக்கு இலவசமாக நிலம் வழங்கினார். மாநாட்டை நடத்துவதற்கான நிதிக்காக மாவட்டத்தின் அனைத்து கிளைத் தோழர்களும் வீடுகள், கடைகள், வியாபார ஸ்தாபனங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் உண்டியல் வசூலுக்குச் சென்றபோது மக்கள் காட்டிய ஆர்வம் எழுச்சியூட்டுவதாக இருந்தது. 16 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்குகள் கடுமையான கோவிட் பரவலின் காரணமாக நடத்த இயலாமல் போனது. 11000 கிளை மற்றும் பகுதிக் குழு மையங்களில் செங்கொடி உயர்த்தப்பட்டது. பகுதிக் குழுக்கள் சார்பில் மாநாட்டு விளம்பரப் பேரணிகளும் நடத்தப்பட்டன.
கொச்சி மரைன் டிரை பகுதியில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நகரில் பிரதிநிதிகள் மாநாடு பி.ராகவன் நகரிலும் பொதுக்கூட்டம் இ.பாலானந்தன் நகரிலும் வரலாற்றுக் கண்காட்சிகள், கருத்தரங்குகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் அபிமன்யூ நகரிலும் நடைபெறும். மாநாட்டைப் பிரச்சாரப்படுத்துவதின் ஒரு பகுதியாக சிறப்பு மலர், ஆன்லைன் போர்ட்டல் ஆகியவை தவிர மாநாட்டு நிகழ்ச்சி நிரல்கள், கட்சி வரலாறு, போராட்டங்கள் ஆகிய செய்திகளை உட்படுத்தி தொடர்ந்து பத்து நாட்கள் ரெட்@கொச்சி என்ற பிரச்சார பத்திரிகையும் பிரசுரிக்கப்பட்டது.
தமிழாக்கம் த.ந.கார்த்திகேயன்
டிசம்பர் 23 முதல் 29 வரை எர்ணாகுளம் லிஸி ஜங்ஷனில் தனியாக வடிவமைக்கப்பட்ட பி.கிருஷ்ணபிள்ளை நகரில் எட்டாவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக கலூர் நீர் ஆணைய மத்திய கிட்டங்கி மைதானத்தில் (ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்) அமைக்கப்பட்ட வியட்நாம் நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான முசாபர் அகமது பிரதிநிதிகள் மாநாட்டு அரங்கில் செங்கொடி ஏற்றினார். பி.டி.ரணதிவே, ஜோதிபாசு, எம்.ஆர்.வெங்கட்டராமன், கோதாவரி பருலேக்கர், சுசிலா கோபாலன் ஆகியோர் தலைமைக்குழுவாக இருந்து மாநாட்டை வழிநடத்தினார்கள். வரவேற்புக்குழு தலைவர் ஏ.கே.ஜி.வரவேற்புரையாற்றினார். கட்சியின் பொதுச் செயலாளர் பி.சுந்தரய்யா ஸ்தாபன அறிக்கையையும் பி.டி.ரணதிவே அரசியல் அறிக்கையையும் எம்.பசவபுன்னையா வேலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். அகில இந்திய பொதுச்செயலாளராக பி.சுந்தரய்யா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டிசம்பர் 29 அன்று நடைபெற்ற மாநாட்டுப் பேரணி கொச்சி நகரத்தை செங்கடலாக மாற்றியது. அன்றுவரையிலான கொச்சியின் வரலாற்றில் மிகவும் அதிகமானவர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியாக அது அமைந்தது என பத்திரிகைகள் சிறப்பு வெளியிட்டிருந்தன. சாலை மார்க்கமாக மட்டுமல்லாமல் மாநிலத்தின் வெகு தூரங்களிலிருந்து படகு மற்றும் வள்ளங்கள் மூலமாக ஆயிரக்கணக்கானவர்கள்
பேரணிக்கு முதல் நாளே பொதுக்கூட்டம் நடைபெற்ற வியட்நாம் நகரை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர். மாலை 6 மணிக்கு துவங்கிய பேரணி இரவு 11 மணிக்கு மேலும் நீடித்தது. எர்ணாகுளம் கச்சேரிப்படி வரையிலான சாலை முழுவதும் மக்களால் நிரம்பி வழிந்தது. தோழர் ஏ.பீட்டரின் தலைமையிலான செந்தொண்டர் பேரணிக்குப் பின்னால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் பயணித்த பி.சுந்தரய்யா, இ.எம்.எஸ், ஏ.கே.ஜி, ஜோதிபாசு, பிரமோத் தாஸ் குப்தா, பசவ புன்னையா ஆகியோர் பேரணி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள்.
பனிரண்டாவது அகில இந்திய மாநாட்டிற்கு முன்னோடியாக 1985 ஆம் ஆண்டு நவம்பர் 20 முதல் 24 வரை எர்ணாகுளத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டிற்குப் பிறகு தற்போது மாநில மாநாடு கொச்சியில் நடைபெறுகிறது.
2022 மார்ச் 1 முதல் 4 வரை எர்ணாகுளத்தில் நடைபெறும் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டம் முழு வதும் நடைபெற்றுள்ளது. அது மாவட்டத்தில் கட்சியின் வலிமை யையும் செயல்திறனையும் பறைசாற்றுவதாக அமைந்தது. மாநில மாநாட்டின் முன்னோடியாக சிபிஐ(எம்)ன் தலைமையில் 150 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. கருணைத் திட்டத்தின் ஒரு பகுதியாக15 டயாலிசிஸ் யூனிட்டுகளும்
செயல்படத் துவங்கியது பொருளாதாரமில்லாத நோயாளிகளுக்கு ஆறுதலாக அமைந்தது. நகரத்தில் 2.75 கோடி ரூபாய் செலவில் தியாகி அபிமன்யூ நினைவு மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டதும் பெருமைமிகு வெற்றியாகும்.
மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக மாவட்டத்தில் கட்சி ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உற்சாகத்தில் எளிமையும் அர்த்தம் நிறைந்ததுமான முன்மாதிரியான பிரச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மாவட்டத்தில் 3030 கிளை மையங்களில் மக்களைக் கவரும் விதமான வரவேற்புக்குழு அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. எர்ணாகுளம் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கு தலைமையேற்ற 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களின் நினைவைப் போற்றும் வகையில் கிளைகள் மட்டத்தில் ஸ்தூபிகள் வடிவமைத்திருந்தது உணர்ச்சிமயமான அனுபவமாக இருந்தது.
தியாகிகளின் நினைவுக் குடில்கள், வளைவுகள், நினைவு மண்டபங்கள், கொடி தோரணங்கள் ஆகிய அலங்கார வேலைப்பாடுகள் மாநாட்டின் எழுச்சியை மாவட்டத்தின் கிராமப்புறங்களும் நகரமும் நெஞ்சிலேற்றுகின்ற காட்சியைக் காண முடிந்தது. அதிகமான கம்யூனிஸ்ட் ரத்த சாட்சிகளின் தன்னலமற்ற தியாகத்தின் நினைவுகள் நிறைந்த கூத்தாட்டுகுளம் பகுதியில் ரத்தச் சாட்சிகளின் தேசம் என்ற புத்தக வாசிப்பு இயக்கம் கிளை மட்டங்களில் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக கோலஞ்சேரி, திருவாணியூரில் கே.வி.பேபி என்ற தோழர் நிலமற்ற நான்கு குடும்பங்களுக்கு இலவசமாக நிலம் வழங்கினார். மாநாட்டை நடத்துவதற்கான நிதிக்காக மாவட்டத்தின் அனைத்து கிளைத் தோழர்களும் வீடுகள், கடைகள், வியாபார ஸ்தாபனங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் உண்டியல் வசூலுக்குச் சென்றபோது மக்கள் காட்டிய ஆர்வம் எழுச்சியூட்டுவதாக இருந்தது. 16 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்குகள் கடுமையான கோவிட் பரவலின் காரணமாக நடத்த இயலாமல் போனது. 11000 கிளை மற்றும் பகுதிக் குழு மையங்களில் செங்கொடி உயர்த்தப்பட்டது. பகுதிக் குழுக்கள் சார்பில் மாநாட்டு விளம்பரப் பேரணிகளும் நடத்தப்பட்டன.
கொச்சி மரைன் டிரை பகுதியில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நகரில் பிரதிநிதிகள் மாநாடு பி.ராகவன் நகரிலும் பொதுக்கூட்டம் இ.பாலானந்தன் நகரிலும் வரலாற்றுக் கண்காட்சிகள், கருத்தரங்குகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் அபிமன்யூ நகரிலும் நடைபெறும். மாநாட்டைப் பிரச்சாரப்படுத்துவதின் ஒரு பகுதியாக சிறப்பு மலர், ஆன்லைன் போர்ட்டல் ஆகியவை தவிர மாநாட்டு நிகழ்ச்சி நிரல்கள், கட்சி வரலாறு, போராட்டங்கள் ஆகிய செய்திகளை உட்படுத்தி தொடர்ந்து பத்து நாட்கள் ரெட்@கொச்சி என்ற பிரச்சார பத்திரிகையும் பிரசுரிக்கப்பட்டது.
தமிழாக்கம் த.ந.கார்த்திகேயன்